வியாழன், 4 ஜனவரி, 2024

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூமியில் தான் தோன்றினோமா இல்லை வேற்றுகிரகத்தில் இருந்து வந்தோமா ,அப்படி வேற்று கிரகத்தில் இருந்து வந்திருந்தால் எங்கிருந்து வந்திருப்போம் ஒரு வேலை நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டிருந்தால் நாம் இயற்கையால் படைக்கபட்டோமா அல்லது இறைவன் என்று அழைக்கக்கூடிய மரணமில்லா சக்தி வாய்ந்தவர்களால் படைக்க பெற்றோமா இல்ல வேற்றுகிரகவாசிகள் நம்மை இந்த பூமியில் தோற்றுவித்தார்களா   என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. இந்த  கேள்விக்கு விடை பொருட்டு இன்றளவும் பல அறிவியலாளர்கள் பல தேடல்களில் உள்ளனர்.

இந்த பூமியில் இரண்டு விதமான மனிதர்கள் உள்ளனர் அதில் ஒரு விதமான மனிதர்கள்  அபூர்வ சக்திகொண்ட என்றும் மரணில்லாத இறைவன் என்பவன் இந்த பிரபஞ்சத்தை படைத்தான் என்று இறைவன் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள் கூறுகின்றனர் . இந்த கடவுள் நம்பிக்கைக்கு எதிராக உள்ள மனிதர்கள்   இயற்கை தான் இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்களையம்  தோற்றுவித்தது என்று கூறுகின்றனர். மனிதர்களின்  இது போன்ற பல  கேள்விக்கு இன்றளவும் விடை கிடைக்காமல் விடையை  தேடுகிறான் மனிதன்.

கடவுள் ஏற்பாளர்கள் 


 

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பல குழுக்களாக பல இனங்களாக பிரிந்து வாழ்வதால் ஒவொரு இனக்குழுவிற்கும் தனித்தனி கடவுள்கள்  தனித்தனி வழிபாடு முறைகள்  தனித்தனி புராணக்கதைகள் உள்ளன .இந்த தனிப்பட்ட ஒவொரு புராணக்கதைகளிலும்  இந்த பிரபஞ்சம் எப்படி இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. உலகில் அதிகம் இருக்கும் கிறித்துவ மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களில் இறைவன்  ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் அதன்  பிறகு வானம், நீர் ,வெளிச்சம் ,ஆகாயம் ,இரவு பகல் என அனைத்தையும் படைத்தார் என்றும் அதன் பிறகு தாவரங்கள்,விலங்குகள்,கடல்வாழ் உயிரினங்களை  படைத்தார் கடைசில் மனிதனை படைத்தார் என்று  பைபிளும்,குரானும் கூறுகிறது.

 


இதே விடயம் ஹிந்து புராணக்கதைகளில் சிவபெருமான் தனது தாண்டவ நடனத்தின் மூலம் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று கூறுகிறது இப்படி உலகம் முழுவதும் இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று கூறும் மனிதர்களிடத்திலேயே மதரீதியான பிரிவுகள்,போர்கள்  ,சண்டைகள்  ஏற்பட்டாலும் அவர்களின் நம்பிக்கை இறைவன் தான் முழு பிரபஞ்சத்தை படைத்தான் என்பதிலிருந்து மாறுவது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

கடவுள் மறுப்பாளர்கள் 

கடவுள் மறுப்பாளர்களின்  கொள்கையை பொறுத்தவரை கடவுள் என்பவர் இல்லை.இந்த மொத்த பிரபஞ்சமும் அதில் உள்ள உயிர்களும்  இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இவர்களின் நம்பிக்கை ஆகும் . இறை நம்பிக்கை நிறைந்திருந்த காலத்தில் இறைவன் தான் அனைத்தையும் படைத்தான் என்று நம்பப்பட்ட காலத்தில் தோன்றியதுதான் "இறைவன் என்று எவனும் இல்லை" இறைவனால் நாம் படைக்கபடவில்லை என்ற கருத்தும் . இவர்கள் இறைவன் இல்லை என்றுகூறுவதற்கு காரணம் அறிவியலும் அறிவியல் சார்ந்த தேடலும் அந்த தேடலில் கிடைக்கின்ற புதுப்புது பதில்களும் தான் காரணம் . அப்படி ஒரு தேடலில் தோன்றியதுதான் big bang theory ,steady state theory ,the cold bang theory ,eternal inflation theory ,mirror universe theory ,black hole theory ,big bounce theory இது  போன்ற பல  கோட்பாடுகள் உள்ளன . ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த கோட்டபாடுகளில் இன்று பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு தான் அண்ட பெரு வெடிப்பு கோட்பாடு  அதாவது ஆங்கிலத்தில் (big bang theory) என்று அழைக்கப்படும் இந்த கொள்கை தான் இன்று பரவலாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


பெரு வெடிப்பு கொள்கை 

 அண்ட பெரு வெடிப்பு கொள்கை என்பது இந்த அண்டம் எப்படி தோன்றியது என்பதை பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு ஆகும் . பெரு வெடிப்பின் கோட்பாடுகளின் படி ஆரம்பக்காலத்தில் இருள் மட்டுமே இருந்தது  12 முதல் 14 பில்லியன்  ஆண்டுகளுக்கு முன்னாள் மிக அடர்த்தி உடன் கூடிய சிறிய அளவிலான எதோ ஒரு பொருள் மிக பெரிய ஆற்றலோடு வெடித்ததன்  காரணமாக மிக பெரிய  இந்த பெரு வெடிப்பு நிகழ்ந்தது.இந்த பெரு வெடிப்பில் ஏற்பட்ட தீ பிழம்பால் இன்று அறியப்படாத எதோ ஒரு காரணத்தால் இந்த பிரபஞ்சம் வேகமாக விரிவடைய தொடங்கிற்று.இப்படி பெருவெடிப்பு நிகழ்ந்த தருணமே காலமும் (time),வெளியும் (space ) தோன்றியது . அடுத்த கணமே ஈர்ப்பு விசை தோன்றியது .ஈர்ப்பு விசை தோன்றிய பின்பு அணுத்துகளைகளை உருவாக்க கூடிய " குவார்க்குகள்  " தோன்றின . குவர்க்குகளை கொண்டு உருவான அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதால் புரோட்டானும் , நியூட்ரானும் தோன்றின.பெரு வெடிப்பு நிகழ்த்து மூன்றவது நிமிடம் புரோட்டானும், நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தை தனித்ததால் இரண்டும் சேர்ந்து அணு கருவை மட்டும் கொண்ட ஹைட்ரஜனும் ,ஹீலியமும், இலித்தியமும் உருவாகின .அதன் பிறகு 5 லட்சம் ஆண்டுகள் கழித்து எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால்   சிறைபிடிக்கப்பட்டு  அணுத்துகள் தோன்றின.அதன் பிற்பாடு 30 கோடி ஆண்டுகள் கழித்தே வின்மீன்களும்,விண்மீன் பேரடைகளும் உருவாகின. 

 


இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த பின்னரே நமது சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின . இவை தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை ஏறத்தாழ 500 கோடி ஆண்டுகள் அக்கிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர் .  

பிரபஞ்சம் 

  அண்டம் அல்லது பிரபஞ்சம் என்பது பரவெளி ,நேரம் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களான கோள்கள் ,விண்மீன்கள் ,விண்மீன் திரள்கள்கல்,பாறைகள் என அனைத்து வகையான பெட்களையும் மற்றும் ஆற்றல்களையும் உள்ளடக்கியது தான் பிரபஞ்சம் . நாம் இந்த பிரபஞ்சமானது  எண்ணிலடங்காத  அளவிலான நட்சத்திரங்களையும் ,கிரங்களையும் கொண்டுள்ளது .

பூமியின் தோற்றம் 



இன்று நாம் வாழும் இந்த பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் சூரிய படலத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறு  பகுதிதான் இந்த பூமி. ஆரம்பகாலத்தில் இந்த பூமி நெருப்பு குழம்பாய் இருந்தது .அதிலிருந்து வெளிப்பட்ட வாயுக்கள் ரசாயனம் கலந்த வாயுக்களாகவே இருந்தது . பூமி பந்து உருவாக்கிக்கொண்டு இருந்தபோது அதன் அருகில் இருந்த சிறுகோள்களையும் ,பெரும் பாறைகளையும் தன்னுள் ஈர்த்து கொண்டது .தன்னை சுற்றி உள்ள தூசுகள் ,பாறைகள் சிறு கோள்கள் என அனைத்தையும்  தன்னுள் ஈர்த்து கொண்டது  பூமி .இப்படி தன்னை சுற்றி உள்ள அணைத்து பொருட்களையும் தன்னுள் ஈர்த்து  கொண்டதால் தான்  பூமி அளவில் புதன் மற்றும் வெள்ளி கிரகத்தை விட பெரிதாக  உள்ளது       

 பூமி உருவாகும்போது அதனை சுற்றியுள்ள பாறைகளை பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் அப்படி ஈர்க்கப்பட்ட பாறைகள் பூமியையை நோக்கி வந்து பூமியில் விழும்  அப்படி பூமியில் விழும்  பாறைகள்  அணைத்து வெறும் பாறைகளாக மட்டும் இல்லாமல்  பலதரப்பட்ட தனிமைகளையும்   கொண்டவந்து பூமியில் சேர்த்து இன்று பயன்படுத்து அணைத்து  விதமான தனிமங்களுக்கும் எதோ ஒரு விண்கல் மூலம் பூமிக்கி கொண்டுவரப்பட்டதுதான்  .இப்படி  தான் பூமிக்கு உயிர்கள் தோன்ற காரணமாக இருந்த நீரும் பூமிக்கு வந்தது .

நீரின் தோற்றம் 



நீர் என்பது  H2O வேதியல்  வாய்ப்பட்டால் விவரிக்கப்படும் ஒரு  வேதியல் சேர்மமாகும் .நீரானது நிறம்மற்று மனமற்று  ஒளி புகும் தன்மை கொண்டது .பூமியில் உள்ள ஓடைகள் ,ஆறுகள்,ஏரிகள் ,குளங்கள் ,குட்டைகள் ,கடல்கள் என அனைத்தும் நீரால் நிரப்பப்பட்டவை .மேலும் பூமியில் வாழும்  உயிர்நிகளின் அணைத்திலும்  நீரானது நீர்ம வடிவில் காணப்படுகிறது .இந்த திரவ நிலையில் நீராகவும் ,திட நிலையில் பனிக்கட்டியாகவும் ,வாயு நிலையில் நீராவியாகவும்  தன்னை மாற்றி கொள்ளும் பண்புடையது இந்த நீர் .  பூமி தோன்றிய கலகட்டத்தில் தன்னை சுற்றி உள்ள பொருட்களை பூமி  தன்னுள்  ஈர்த்துக்கொண்டது  அப்படி  பூமியால் ஈர்க்கப்பட்டு  பூமியில் வந்து விழுந்த பல பாறைகளில் பனிப்பாறைகளும் உண்டு .இப்படி பூமியில் வந்து விழுந்த பனிப்பாறைகள்  பூமியின் அதீத வெப்பத்தால் பனிப்பாறைகள் உருக்கப்பட்டு  ஆவியாக்கப்பட்டு மேகங்களாக  உருவெடுக்க  தொடங்கின   இந்த நிகழ்வு பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்ததால் தான்  பூமியில் நீர் தோன்றியது"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவன் சொல்லிற்கேற்ப  பூமியில்  உயிர்கள் தோன்ற மிக முக்கிய  காரணமாக  அமைந்தது இந்த நீர் தான் .


Hindi Is Not a Purely Indian Language”

  Hindi language: its origin, history, and evolution : The Origin and Evolution of the Hindi Language Hindi, one of the most widely spoke...