புதன், 27 ஏப்ரல், 2022

ATHIYAN 3

                                                                   அதியன் பாகம் 3

மேரு மலையின் கிழக்கே மிக பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தவர்கள்தான்  பாண்டியர்கள்.சிவபெருமான் வழி வந்தவர்கள் சிவன்தான் பாண்டியர்களின் முதல் அரசன்.இந்த  பாண்டியர்களை தாக்க தெற்கே உள்ள ஒளி நாட்டை ஆண்டுவந்த அந்துவன் என்ற மன்னன் பாண்டியர்களை தாக்க மிக பெரிய படையை திரட்டி வந்தான்.இந்த பாண்டிய நாட்டை ஆட்சி செய்பவர்தான் குமரவேலபாண்டியன் .இந்த குமரவேலனின் மகன்தான முடிநாகன்.இவனது முழு பெயர்  முடிநாகப்பாண்டியன் 


                                                                         

                                          இந்த செய்தியைத்தான் குமரவேலபாண்டியன்   தனது மகனான  முடிநாகபாண்டியனுக்கு  அனுப்பிருப்பர்.முடிநாகனும் 5 வருடம் கழித்து தந்தை இடம் இருந்து வந்த செய்தியை கேட்டு புறப்பட்டு பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டான் . முடிநாகன் குதிரையில் பாண்டிய தேசத்துக்குள் செல்லும்போது ஒரு மலையை கடக்க வேண்டியிருந்தது.குதிரையையை கைகளால் பிடித்து நடந்து மலையின் உச்சியை அடைந்தான் முடிநாகன்.மலை உச்சியில் இருந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அப்போது அவனுக்கு ஒரு காட்சி தென்பட்டது.காளை சின்னம் பொரித்த ஒளி தேசத்து  கொடிகள் ஆங்காங்கே பறக்க அந்த கொடிகளின் கீழே ஆயிரக்கணக்கில் போர் வீரர்களும்.அவர்களுடன்  குதிரைபடைகளும் யானைபடைகளும் பாண்டிய நாட்டை நோக்கி சென்றுகொண்டு இருந்தனர்.இதை கண்ட முடிநாகனுக்கு புரிந்தது.தந்தை கூறியது உண்மைதான்  என்று எண்ணி குதிரையில் ஏறி அமர்ந்து பாண்டியநாட்டு அரண்மனையை நோக்கி விரட்டினான் முடிநாகபாண்டியன் .


       அரண்மையை அடைந்த முடிநாகன் தந்தை தேடி அரண்மணை முழுவதும் அலைந்தான்.எங்கு தேடியும் காணவில்லை.அரண்மனை காவலாளியிடம் தந்தை எங்கே  விசாரித்தான் முடிநாகன்,அதற்கு காவலாளி மன்னர் முன்னோர்களை அடக்கம் செய்திருக்கும்  இடத்திற்கு சென்றுள்ளார் இளவரசே என்று பதில் அளித்தான்.சிறிதும் நிற்காமல் குதிரை மீது ஏறி தந்தை இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான் முடிநாகபாண்டியன்  .சென்ற இடத்தில் சில வீரர்களுடன் மன்னர் குமரவேலபாண்டியன்   அவரது முன்னோரை நோக்கி பிராத்தனை செய்து கொண்டு இருந்தார்.முடிநாகனும் உள்ளே வந்து எதுவும் பேசாமல் பிராத்தனை மேற்கொண்டான்.பிராத்தனை முடித்த மன்னர் முடிநாகப்பாண்டியனிடம்  எப்போது வந்தாய் என்று வினவ இப்போதுதான் தந்தையே என்று கூறினான்.உடனே மன்னர் தளபதியை நோக்கி படைகளை பற்றி விசாரித்தார்.அதற்கு தளபதி படைகள் தயாராகி போர்நடக்கும் இடத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டு இருக்கிறது மன்னா என்று கூறினார்.உடனே மன்னர் குமரவேலபாண்டியன் ,இளவரசன் முடிநாகபாண்டியன்  ,படை தளபதி,உடன் இருந்த வீரர்கள் அனைவரும் போர் நடக்கும் திசையை நோக்கி புறப்பட்டனர்.குமரவேலப்பாண்டியன் முடிநாகனை பார்த்து நலம் விசாரிக்க முடிநாகனும் பதில் அளித்தவாறு ஒளி நாட்டு படைகளை வரும் வழியில் கண்டேன் அவர்கள் மிக பெரிய படையை திரட்டி வருகின்றனர் போர் படும் உக்கிரமாய் இருக்கும் என்று கூறினான் முடிநாகன்,அதற்கு தந்தை குமரவேலன் போருக்கு நீ தயாரா என கேட்க   அதற்கு முடிநாகன்                                                                                                                                             

தொடரும் ...........                                                                                                                                                                                                                                                                                     அதியன்                      

  இது ஒரு கற்பனை கதை,யார் மனதையும் புண்படுத்த அல்ல               

 கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடவும்                                                                                                               

1 கருத்து:

Hindi Is Not a Purely Indian Language”

  Hindi language: its origin, history, and evolution : The Origin and Evolution of the Hindi Language Hindi, one of the most widely spoke...