வியாழன், 28 ஏப்ரல், 2022

ATHIYAN 4

                                                            அதியன் பாகம் 4

போருக்கு தயாரா என கேட்ட குமரவேலனுக்கு முடிநாகன் நான் போருக்கு தயார் என்று கூறினான்.ஒரு வழியாக மன்னரும் அவருடன் இருந்த அனைவரும் படைகள் இருந்த இடத்தை அடைந்தனர்.படை வீரர்கள் அனைவரும் போர் நடுக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் கூடாரங்கள் அமைத்து கொண்டிருந்தனர்,இன்னும் சிலர் போருக்கு தேவையான ஆயுதங்களை தயார் செய்தனர்.நாட்டில் உள்ள முக்கிய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர் .பாண்டியர்கள் போருக்கு தயாராகினர்.அதே போல் ஒளிநாட்டு படைகளும் மறுப்பக்கம் போருக்கு தயாராகினர்.போர் வியூகங்கள் அமைப்பது போன்ற முக்கிய செயலில் ஈடுபட்டனர்.

மறுநாள் சூரியன் உதயம் ஆகா இரண்டு நாட்டு படைகளும் போர் புரிய தயாராக இருந்தன.



                          பாண்டிய தேசத்து மன்னன் குமரவேலன் போர்க்களத்தில் படை வீரர்களில்  முதல் ஆளாக குதிரையில் அமர்ந்தவாறு  எதிரி நாட்டு வீரர்களை நோக்கி குதிரையை விரட்ட உரையில் இருந்த வாளை குதிரை ஓடும்போதே எடுக்க இதை கண்ட பாண்டிய வீரர்கள் மன்னரை பின்தொடர்ந்து சென்றனர்.

                       ஒளிநாட்டு வீரர்களும் பாண்டிய நாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக ஓடி வந்து  மோதிக்கொண்டன.

 


தந்தை குமரவேலனுடன் சேர்ந்து மகன் முடிநாகனும் போர் புரிந்தான்.போர்க்களத்தில் முடிநாகன் செயல்பட்ட விதம் கண்டு மன்னார் குமரவேலன் பூரித்து போனார். 





                             ஆனால் அன்றய போரில் குமரவேலனுக்கு பெருத்த காயம் ஏற்பட அவர் போர்க்களத்தில் இருந்து சக வீரர்களால் கூடாரத்திற்கு அழைத்து செல்ல .முதல் நாள் போர் முடிவுக்கு வந்தது.அன்று இரவு ஒளிநாட்டு வீரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.அனால் பாண்டியர்கள் சோகத்தில் இருந்தனர் அன்று இரவு பாண்டிய மன்னர் குமரவேலன் முடிநாகனிடம் நாளைக்குள் போரினை முடிக்க வேண்டும் வெற்றி நம் பக்கம் இருக்க வேண்டும் என கூற அதற்கு முடிநாகனும் சரி என்று கோவத்தோடு மறுநாள் போருக்கு  காத்திருந்தான். 

                                             மறுநாள் போர் தொடங்கியது.அனால் இன்றிய போரில் முடிநாகன் அனைவருக்கும் முன்நின்றான். போர்களத்தில் அம்புகள் காற்றை கிழித்து கொண்டு அவரவர் எய்த  இலக்கினை நோக்கி பய, குதிரைகளும் யானைகளும் போர்க்களத்தில் சத்தம் இட  போர் உக்கிரமாக காணப்பட்டது.இன்று போரை முடித்தே ஆகா வேண்டும் என்ற எண்ணத்தில் பாண்டிய படைகள் போரில் மூர்க்கமாக  போரிட்டு முன்னேறி சென்றனர்.

முடிநாகன் போர்க்களத்தில் எரிமலை போல் நெருங்கி வந்த வீரர்களை கொன்று குவித்தான் எண்ணியது போல் இரண்டாம் நாளில் போர் முடிவுக்கு வந்தது.போரில் ஒளிநாட்டு வீரர்கள் தோல்வியை தழுவினார்.ஆனால் ஒளிநாட்டு மன்னன் அந்துவன் மட்டும் அங்கிருந்து தப்பி மேருமலை தொடரில் பதுங்கி விடுகிறான். மேருமலை தொடரில் பதுங்கிய அந்துவன்........

தொடரும்                                                                                                                     

                                                                                                                                   அதியன் 

இது ஒரு கற்பனை கதை இக்கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல  

கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்                                                             

1 கருத்து:

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...