வெள்ளி, 29 ஏப்ரல், 2022

ATHIYAN 5

                                                               அதியன்  பாகம் 5

                              தோல்வியை கண்டு போர் களத்தில் இருந்து தப்பி ஓடிய அந்துவன் மேரு மலைஇத்தொடர்களில் பதுங்குகிறான்.பதுங்கிய அந்துவனை பிடிக்க பாண்டிய படைகள் தேடின ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அன்று இரவு மலையில் பதுங்கிய அந்துவன் ' இருந்த நாட்டையும் இழந்துவிட்டேனே என எண்ணி கோவம் கொண்டு என்னை வீழ்த்திய பாண்டிய மன்னனை  நான் தோற்கடிப்பேன் என சபதம் மேற்கொண்டான்.


                                       போர் முடிந்து சில வாரங்கள்  கழித்து பாண்டிய மன்னன் குமரவேலன் மரணம் அடைகிறார். போரில் ஏற்பட்ட காயம் ஆழமாக இருந்ததால் குணப்படுத்த  முடியாமல் இறந்து போகிறார்.குமரவேலன் இறந்துபோனதால் முடிநாகப்பாண்டியனுக்கு அரசப்பட்டம் சூடினார்.முடிநாகன் அரியணை ஏறியதும் என் தந்தையின் மரணத்திற்கு காரணமான அந்த ஒளிநாட்டு மன்னன் அந்துவனை பிடிக்க தளபதிக்கு கட்டளை இடுகிறான்.கட்டளை ஏற்று தளபதி படையில் இருந்த ஒரு குழுவை அனுப்புகிறான்.காலங்கள் ஓடின அந்துவனை பிடிக்க முடியவில்லை.அதே சமயம் பாண்டிய மன்னன் குமரவேலன் ஒரு நீர்கோவிலை எழுப்ப எண்ணி அதன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது அவர் இறந்ததால் அந்த வேலை நின்று போனது.அந்த வேலையை தொடர எண்ணி கோவில் பணி நடக்கும் இடம் நோக்கி சென்றான்.ஒரு மிக பெரிய ஏரி ஒன்றை செயற்கையாக  உருவாக்கி அந்த ஏரியின் நடுவில்  பூமிக்கும் கீழே கோவில் ஒன்றை கட்டுவது ஏரியில் நீர் சேர்ந்து நிரம்பி இருக்கும் போது கோவில் தானாக மேல எழும்பும்.இதுதான் அந்த கோவிலின் அமைப்பு.

                                     நீர் சேர்ந்த ஏரியில் இருந்து நீர் அணைத்து ஊர்களுக்கும் போகும்படி வழி செய்யப்பட்டிருக்கும். இந்த நீரை கொண்டு மக்கள் விவசாயம் செய்ய தொடங்குவர்.இவர்கள் நிலத்தை உழுது நெல் பயிரை விதைக்க அந்த நீர் கோவிலின் கலசம் அந்த ஏரியின் மேல் எழும்பும் நெற்பயிர் வளர வளர நீர்கோவிலும் வளரும் பயிர் அறுக்கும்போது கோவில் முழுவதும் நீரில் இருந்து மேல் எழும்பி காட்சி அளிக்கும் இதுதான் அந்த நீர் கோவிலின் அமைப்பு என்று நீர்கோவிலின் தலைமை கட்டிடர் கூற, நின்ற வேலையை தொடங்குகள் என்று கூறினான் முடிநாகன்.கோவிலின் வேலையையும் தொடங்கியது.முடிநாகன் நல்லாட்ச்சி புரிந்தான் மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் காத்தான்.முடிநாகனிடம் ஒரு குணம் இருந்தது அது அவனது நாட்டில்இருக்கும் அனைவரும் அன்பால் அரவணைத்தான் முடிநாகன்.சில மாதங்கள் களைத்து முடிநாகனுக்கும் கீழைநாட்டு இளவரசி அவிரா என்பவளுக்கு  திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடந்தேறியது.இந்த முடிநாகனுக்கும்,அவிராவுக்கும் ஒரு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.அந்த குழந்தை தான் மாயோன் வருடங்கள் செல்ல செல்ல மாயோனும் சிறு வயது முதல் போர்கலைகளை ஒன்று விடாமல் கற்கிறான் வருடங்கள் சில சென்றது முடிநாகன் அவனது தந்தை எண்ணியதுபோல் நீர் கோவிலை கட்டி முடித்தான் அந்த கோவிலுக்கு நீரேஸ்வரன் என பெயர் சூட்டினார் மழை பொழிய தொடங்கியது நீரேஸ்வர ஏரியில் நீர் நிரம்ப கோவில் மண்ணுக்குள் இருந்த மேல எழும்ப தொடங்கியது.ஊர் மக்களும் பயிர்களை விதைக்க தொடங்கினர்.நாடு முழுவதும் குமரி கண்டம் முழுவதும் இந்த நீர்கோவில் செய்தி கூறப்பட்டது.பக்கத்து நாட்டு அரசர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.வருகின்ற தை மாதம் நீரேஸ்வர ஏரியில் நீரேஸ்வர ஆலயத்தில் வழிபாடு என்று  அந்த அழைப்பில் கூறப்பட்டது.



                        தை திருவிழா தொடடங்கியது.மக்கள் அனைவ்ரும் நீரேஸ்வர கோவிலை நோக்கி சென்றனர்.இரவு நேரம் வழிபாடு செய்ய திட்டமிடப்பட்டது.இரவு நேரம் மக்கள் அனைவரும் ஒன்று சேர படகுகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் கைகளை விளக்குகள் ஏந்தி  செல்ல அந்த இரவு அழகாக இருந்தது இதை கண்டு பேரானந்தம் கொண்டார் மன்னர் .ஆனால் அங்கு ஒரு சிறு கூட்டம் ஒரு வெறியோட வேட்டையாட சரியான நேரத்திற்கு காத்திருந்தது.                                                                                                                                                    

தொடரும் .........                                                                                                             

                                                                                                                                             அதியன்

இது ஒரு கற்பனை கதை.யார் மனதையும் புண்படுத்த அல்ல 

கதையை பற்றின கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 

1 கருத்து:

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...