சனி, 16 டிசம்பர், 2023

இம்சை அரசன் 1ம் புலிக்கேசி

                     இம்சை அரசன் 1ம் புலிக்கேசி (1) 

 
 

முன்னொரு காலத்துல  பேரூர்னு  ஒரு அழகான கிராமம் இருந்தது.அந்த கிராமத்தை சுத்தி எங்கு பார்த்தாலும் நீரோடைகளும்,ஆறுகளும்,ஏரிகளும் நிறைந்து காணப்பட்டது.



 அந்த கிராமத்துல இருந்த ஒரு விவசாயி இருந்தாரு அவரு பேரு முனியாண்டி.அந்த முனியாண்டிக்கு கல்யாணம் பண்ற வயசுல ஒரு மகன் இருந்தான் அவன் பேரு தவுட்டுக்கல்லை.இந்த தவுட்டுக்கல்லை ரொம்ப சோபேரிதனமான ஒரு ஆளு.ஒரு நாள் தவுட்டுக்கல்லை அப்பா முனியாண்டிக்கு உடம்பு சரி இல்லாம போயிடுது உடனே முனியாண்டி தன்னோட பையனை நெனச்சி வருத்தப்பட தொடங்கினரு.முனியாண்டிய பாக்க ஊர் மக்கள் எல்லோரும் முனியாண்டியை பாத்து உன்னோட காலம் அவ்ளோதா.நீ போனதுக்கு அப்பறம் உன்னோட புள்ளைய பாத்துக்க யாரும் இல்ல.அதனால அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருனு சொல்லிட்டு போக உடனே முனியாண்டியும் தவுட்டுக்கல்லைக்கு பொண்ணு பாக்க ஆரமிச்சாங்க.
எங்கு தேடியும் சரியா வரன் அமையல.மகனுக்கு எங்கு தேடியும் பொண்ணு கெடைக்கலனு ஆழ்ந்த சோகத்துல இருந்தாரு முனியாண்டி.
 
ஒரு நாள் முனியாண்டிக்கு ஒரு தரகர் ஒருத்தரு ஆத்துக்கு அக்கரைல ஒரு கிரமம் இருக்கு அங்க போன உன்னோட பையனுக்கு பொண்ணு கேடிக்கும்னு சொல்ல உடனே முனியாண்டியும் அவரோட பையன் தவுட்டுக்கல்லையும் பொண்ணு பாக்க அந்த கிராமத்துக்கு கெளம்புனாங்க.
முனியாண்டியோட சொந்தக்காரங்க கொஞ்சபேரு  கிராமமக்கள் கொஞ்சப் பேருனு ஒரு கூட்டமே கெளம்பி வண்டி கட்டிக்கிட்டு போனாங்க.  

பொண்ணு பாக்க போன இடத்துல பொண்ணோட அப்பா எனக்கு ரெண்டு பொண்ணு.பொண்ணுக்கு அம்மா இல்ல.அதுங்க ரெண்டு ரெட்டை புள்ளைங்க அதுங்க பொறந்து கொஞ்ச நாளிலே அவங்க அம்மா செத்துபோச்சி.பொறந்ததுல இருந்து இரண்டு பேரு பிரிஞ்சி இருந்ததே இல்ல.அதனால என்னோட ரெண்டு பொன்னையும் உங்க பயனுக்கே தரேன்னு சொல்லிட்டாரு பொண்ணோட அப்பா.இத கேட்ட முனியாண்டிக்கு ஒரே மகிழ்ச்சி சரினு முனியாண்டியும் ஒத்துக்கிட்டாரு .உடனே திருமண வேலைகள் நடக்க தொடங்கி எல்லா வேலைகளும் ஒரு மாசத்துல முடிஞ்சிடிச்சி கல்யாண  நாளும் வந்துச்சி .
 



 கல்யாண நாள் அன்னைக்கு தவுட்டுக்கல்லைக்கும் அங்கவை மற்றும் சங்கவை என்ற இரட்டையருக்கும் கல்யாணம் நடந்துச்சு  கல்யாணத்துக்கு வந்த ஊர் மக்கள் எல்லோரும் தவுட்டுக்கல்லைக்கு எங்கியோ மச்சம் இருக்குடா பாரே ஒரே மேடைல அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் தாலிகட்டுற பாரன் ம்ம்ம் என்று முதலிரவுல எப்படி ட என்றும் ஆளாளுக்கு பேசிக்கொள்ள இங்கு கல்யாணம் முடிஞ்சி எல்லோரும் வீட்டுக்கு புறப்பட்டாங்க.கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு நேரம் குறிக்க சொல்லி ஜோசியரிடம் கேட்டாரு முனியாண்டி.ஜோசியரும் ஒரு நல்ல நேரத்தை குறிச்சி கொடுத்தாரு.அதன் படி தவுட்டுக்கல்லைக்கு திருமண வாழ்க்கையை அமைச்சு கொடுத்த கொஞ்ச நாளிலே முனியாண்டியும் செத்துபோய்ட்டாரு. இப்ப வீட்ல தவுட்டுக்கல்லையும் அவனோட ரெண்டு பொண்டாட்டியும் தான்.வாழ்கை பொறுப்பு முழுசா தவுடு தலைல.

கொஞ்ச நாள் கழிச்சி தவுடு ஒரு நாள் நா  வயலுக்கு போரனு அவோனோட ரெண்டு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு ஏர்கலப்பை தூக்கி தோளுல  வசிக்கிட்டு ரெண்டு வண்டி மாடையும் புடிச்சிகிட்டு  வயலுக்கு போன தவுடு.வயலுக்கு போன தவுடு ரெண்டு மாடையும் ஒரு  அரசமரத்தடியில கட்டிட்டு படுத்து தூங்க ஆரம்பிச்சான் பகல் ஒரு மணிக்கு எழுந்து சாப்டுட்டு திரும்பவும் படுத்து தூங்கி சூரியன் மறையும் போது எழுந்து  ரெண்டு மாடையும் ஓடிக்கிட்டு போய் சேத்துல இறக்கி மாடு மேல கலப்பை மேலலா  சேரு பூசிக்கிட்டு வேல செஞ்ச மாதரி வீட்டுக்கு போவா.இத பார்த்த அவோனோட ரெண்டு பொண்டாட்டியும் அயோ புருஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வராருனு தவுடுக்கு சுடு தண்ணி வச்சி குளிப்பாட்ட மீன்,கறினு விதவிதமா சமைச்சி போட்டாங்க தலைவன் தவுடு நல்ல சாப்பிட்டான்.இப்டியே ரொம்ப நாள் போச்சி வயலுல பயிர்களா நல்ல வளந்து அறுவடைக்கு  வந்த நேரம்.தவுடோட ரெண்டு மனைவியும் தவுடு கிட்ட போய் ஏங்க எல்லோரும் வயலுக்கு நெல் அறுக்க போறாங்க.நீங்களும் ரொம்ப கஷ்டபட்டுடிங்க அதனால நம்ம வயல் எங்க இருக்குனு சொன்ன நாங்க ரெண்டு பேரும் போய் நெல்ல அறுக்குறோம் சொல்ல தவுடுக்கு மனசுக்குள்ள ஒரே பயம்.ஏன்னா தவுடு வயலுல பராமரிப்பு இல்லாம எதுவுமே வெளையாம வெறும் கோரா புள்ளவும் அங்கங்க கொஞ்ச நெல்லுமா இருந்துச்சி அதனால  பயந்துகிட்டு அவோனோட வயலை சொல்றதுக்கு பதிலா பக்கத்துல வேறொருதொரட வயலுக்கு வழி சொன்ன தவுடு 

உடனே தவுடு இங்கிருந்து நேரா போன ஒரு முருகன் கோவில் வரும் அங்க இருந்து கிழக்கு பக்கமா கொஞ்ச தூரம் போன ஒரு அரச மரம் வரும் அந்த அரச மரத்துக்கு பக்கதுல ஒரு வாய்க்கால் ஒன்னு போகும் அந்த வாய்கால் பக்கத்துல வண்டி பாத ஒன்னு போகும் அது மேலே போன பணத்தோப்பு வரும் அதுகிட்ட ஒரு அரச மரம் வரும் அந்த அரச மரத்துக்கிட்ட ஒரு வயல் இருக்கும் அந்த வயலுல ஒன்னுமே வெலையாம வெறும் கோரா புள்ள இருக்கும் அது நம்ம வயல் இல்ல அதுக்கு பக்கத்துல ஒரு வயல் நல்ல ஆள் உயரத்துக்கு நெல் வெளஞ்சி இருக்கும் அந்த வயல்தா நம்பளோடது னு சொல்ல உடனே அங்கவையும் சங்கவையும் கோணி,அருவாள எடுத்துக்கிட்டு தவுடு சொன்ன அந்த இடத்துக்கு போய் நெல் பயிறுகளை அறுக்க.அந்த வயலோட சொந்தக்காரர் நெல் அறுக்க ஊரு முழுக்க ஆள் தேடியும் யாரும் கிடைக்காம சோகத்துல வயலுக்கு போனாரு.


 வயலுக்குசொந்தக்காரர் போனவருக்கு ஒரே ஆச்சிரியம் நம்ம ஊரு முழுக்க ஆள் தேடியும் யாருமே கிடைக்கல ஆனா இங்க ரெண்டு பொண்ணுங்க நெல்ல அறுத்து வசிருக்காங்களே போய் விசாரிப்போம் அப்டினு போய் யாரு மா நீங்க என்னோட வயலுல  பண்றிங்க அப்டினு கேட்டாரு வயலோட சொந்தக்காரர் கேட்க அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும் நாங்க ரெண்டு பேரும் தவுட்டுகளையோட பொண்டாட்டி அவருதா போய் இந்தமாதிரி நம்மக்கு அந்த இடத்துல ஒரு வயல் இருக்கு நீங்க ரெண்டு பெரும் அங்க போய்  நெல்லு அறுத்துவைங்க நா வரணு  சொன்னாரு அப்டினு சொன்னாங்க தவுடோட பொண்டாட்டி ரெண்டு பேரும்.இத கேட்டு அதிர்சி  அடைந்த வயலோட சொந்தக்காரர் இந்தம்மா நீ வந்ததுலா  சரிதான்  ஆனா தவுடோட தோ இருக்கு பாரு அதா அவோனோட வயலை காண்பிச்சி நீங்க வேற ரொம்ப கஷ்டப்பட்டு நெல் அறுத்து வச்சிருக்கிங்க அதுக்கு இந்த மா கூலினு ஆளுக்கு ரெண்டு மூட்ட நெல்லு குடுத்தாரு அந்த வயலோட சொந்தக்காரர்.அந்த கூலியை வாங்கிட்டு போய் அவரு சொன்ன வயலை பார்த்த ஒரே கோர புல்லு மட்டும்தான் அது பாதர்தவுடனே அங்கவைக்கும் சங்கவைக்கும் சரியான கோவம்.இப்டி ஒருத்த கூட வாழ்ரத விட அவனை ஒரேயடியா கொன்றலனு தவுடோட ரெண்டு பொண்டாட்டியும் முடிவு பண்ணாங்க.
 
கொஞ்ச நாள் கழிச்சி தவுடு வீட்ல சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம் வந்துடிச்சி காரணம் தவுடோட சோம்பேறி தனம்தான்.சரி இதுக்கு அப்பறம் ரெண்டு வண்டி மாட வித்துடலாம்னு முடிவு பன்னி அவனோட ரெண்டு பொண்டாட்டிகிட்ட போய் நாளைக்கு காலைல நா ரெண்டு மாடையும் ஓடிக்கிட்டு பட்டணத்துக்கு போற அதற்கான ஏற்பட செய்ங்க சொன்னா தவுடு.இத கேட்ட தவுடோட ரெண்டு பொண்டாட்டியும் இதுதான் சரியான நேரம் இவன  கொலை  செய்ய முடிவு பண்ணி மறுநாள் காலையில எழுந்து தவுடுக்கு சாப்பாடு செய்ய அந்த சாப்பாட்ல விஷத்தை கலந்து குடுத்தாங்க தவுடோட ரெண்டு பொண்டாட்டியும்.


தவுடும் மாட்டு வண்டியில மாட பூட்டிஆக்கிவச்ச சோறு எடுத்துக்கிட்டு பட்டணத்துக்கு புறப்பட்ட தவுடு.
 
பட்டணத்துக்கு போன தவுடு பட்டணத்து பார்த்து ஒரே ஆச்சிரியம் .எங்க பார்த்தாலும் உயர உயரமனா கட்டிடடங்கள் கடைவீதிகள் லா  பார்த்து வியந்தான்.அப்போ அங்க வந்த ஒருத்தன் கிட்ட போய் ஐயா இங்க பெரிய சந்தை எங்க நடக்கும் அதுக்கு கொஞ்சம் வழி சொல்லுங்க னு கேட்ட தவுடு. உடனே பெரியவரும் என்ன தம்பி ஊருக்கு புதுசா எந்த ஊரு நீ கேட்டாரு .அதுக்கு தவுடு நா பேரூர் னு ஒரு கிராமத்துல இருந்து வரங்க சொல்ல அதுக்கு பெரியவரோ சந்தைக்கு என்ன விசியமா போறனு கேட்டாரு.அதற்கு நா இந்த மாடோட சேத்து இந்த வண்டியையும் விக்கபோறேன் கொஞ்சம் வழி சொல்லுக்கு ஐயான்னு கேட்டா தவுடு.உடனே அந்த பெரியவரும் சந்தைக்கு வழி காட்ட தவுடும் சந்தைக்கு போனான்.
 
சந்தைக்கு போன தவுடுக்கு ஒரே ஆச்சிரியம் விதவிதமான கடைகள் ,விதவிதமான மக்கள் கண்ட தவுடுக்கு ஒரே மகிழ்ச்சி.உடனே தவுடு வந்த வேலையை பாப்போம் என்று அந்த சந்தையில் மாடுகளை விக்குற இடத்துக்கு போய் அவங்களோடு நின்னுகிட்டு அவன் கொண்டுவந்திருந்த மாடையும்,மாட்டுவண்டியையும் சேத்து விக்க முயற்சி பண்ணுன.ஆனா யாருமே  வாங்க வரல.கொஞ்ச நேரம் கழிச்சி ஒருதத்தரு வந்து மாட்டையும் மாட்டுவண்டியையும் சேர்த்தே வாங்கிகிட்டு போக தவுடுக்கு  ஒரே கவலை என்ன பண்றது வேற வழி இல்லனு மாடையும் மாட்டுவண்டியையும் வித்த காச எடுத்துக்கிட்டு சோத்து மூடியையை தூக்கிகிட்டு பேருரை நோக்கி நடக்க ஆரம்பிச்சாரு  தவுடு.

                                                                                        BY
                                                                                     A.RAJ





 



 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...