சனி, 21 அக்டோபர், 2023

அதியன் (குமரி வீரன் )

                அதியன் (குமரி வீரன் ) பாகம் 1

13000 ஆண்டுகளுக்கு முன்பு  இரவு நேரம் அது நிலவு பிரகாசமாக அதன் ஒளியை பூமியின் ஒரு பக்கத்தில் வீசிக்கொண்டு இருந்த சமயம்.ஆங்காங்கே இரவு நேர வேட்டை விலங்குகள்  காடுகளில் "வழி தவறிய விலங்களையும்,பார்வைக்குன்றிய விலங்குளையும்" குறிவைத்து வேட்டையாட காத்திருந்த நேரம் அது.

திடிரென ஒரு இடி சத்தம் வானில் எங்கிருந்தோ ஒலித்தது இதை கேட்ட ஒட்டுமொத்த உயிர்களும் ஒரு நிமிடம் பயந்து வின்னை உற்றநோக்கின. கார்மேகங்கள் மெதுமெதுவாக நிலவின் வெளிச்சத்தை மூடிக்கொண்டே வந்து கடைசியில் முழு நிலவையும் மூடிக்கொண்டது. அதனால் அங்கு இருந்த மொத்த நிலப்பரவும் இருளில் மூழ்கியது .

விண்ணில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உராய தொடங்கின.அதன் விளைவாய்  ஏற்பட்ட மின்சாரம் மிகுந்த வெளிசத்தோடும் இடி முழக்கத்தோடும் அங்கிருந்த உயிர்களை நடுங்க வைத்தது இயற்கை.கார்மேகங்கள் மழை துளிகளை பொழிய தொடங்கியது.காடுகளில் மரத்தில் இருந்த வௌவல்கள் ஒரு திசையை உற்றுநோக்கி கொண்டே இருந்தன.

மனிதர்கள் சிலர்  தீ பந்தகளோடு அவர்களுக்குள் பேசிக்கொண்டே காடுகளில் சில மூலிகை பொருட்களை தேடி கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் ஒரு செடியை உற்றுநோக்கியவாறு அதன் அருகில் சென்று தீ பந்தத்தை  அந்த செடியின் அருகில் கொண்டு சென்று அது சரியான மூலிகைதான என்று  அவன் மனதுக்குள் அதை சரிபார்த்து அவனுடன் வந்த  அனைவரும் அழைத்து அந்த மூலிகையை காட்டினான்.அனைவரும் அந்த மூலிகையை பறித்து சேகரிக்க தொடங்கினர்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் எதற்காக இந்த இரவு நேரத்தில் நாம் ஏன் இந்த மூலிகை பறிக்க வந்துள்ளோம் பேசாமல் காலையில் வந்து பறித்துக்கொள்ள கூடாத என்று வினவினான்.அதற்கு கூட்டத்தில் இருந்த இளம் வாலிபன் ஒருவன்

 



திங்கள், 16 அக்டோபர், 2023

5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மரக்கட்டைகள் கண்டுபிடிப்பு - ஆதி மனிதன் எதற்க்காக பயன்படுத்தினான்


ஜாம்பியாவில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவை பழங்கால மனித வாழ்கை பற்றிய தொல்லியல் ஆய்வாளர்களின் புரிதலையே புரட்டிப்போடும் விதத்தில் உள்ளன.

சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தமக்கான கட்டமைப்பை உருவாக்கி மரத்தை பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியளர்கள்  கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்த சான்றுகள் கற்கால  மனிதன் தங்குமிடங்களாக இருந்ததை காட்டுவதாக நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு நமது ஆரம்பகால மூதாதையர்களைப் பற்றி இதுநாள் வரையில் எனக்கு இருந்த புரிதலை மாற்றியுள்ளது என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் லாரி பர்ஹம்.

லிவர்பூல்  பல்கலைக்கழக்தின் விஞ்ஞானி தலைமையலான குழு மனித இனத்தின் ஆழமான வேர்களை தேடி ஆய்வு மேற்கொண்டது.குறிப்பாக பழங்காலத்தில் மரங்கள் பயன்பாட்டில் இருந்தனவா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. 

பழங்கள் மனிதர்கள் பற்றிய எண்ணத்தை மாற்றும் கண்டுபிடிப்பு 

இந்த கண்டுபிடிப்பு பழங்கால மனிதர்கள் எளிமையான நாடோடி வாழ்க்கைநடத்தியதாக கருதும் தற்போதைய நமது எண்ணத்தை மாற்றியமைக்க கூடும் பண்டையகால மனிதர்கள் மரத்திலிருந்து புதிய மற்றும் பெரிய ஒரு பொருளை உருவாக்கியதாக கூறுகிறார் பேராசிரியர் பர்ஹாம்.

அவர்கள் தங்களின் புத்திசாலித்தனம் கற்பனை மற்றும் திறன்களை பயன்படுத்தி தங்களது காலத்துக்கு முன்பும்,பின்பும் பார்த்திராத ஒன்றை உருவாக்கினர் என்கிறார் பர்ஹாம்.

மரக்குச்சிகள் உள்ளிட்ட பலன்களை மரப் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர்.ஆனாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் தான் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்றன் மீது ஒன்று சாய்த்து வைக்கப்பட்டது போன்ற நிலையில் காணப்பட்ட அவற்றில் வெட்டுகளும் இருந்தன என்கிறார் ஆய்வு குழுவின் உறுப்பினரும் அப்பெரிஸ்டவித் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான ஜெப் டல்லர் கூறினார்.

இந்த மரக்கட்டைகளில் உள்ள வெட்டுகள் கல்லால் ஆனா கருவியல் ஏற்பட்டவை என்பதையும் நாம் தெளிவாக காணலாம்.

நெருப்பை உண்டாகுதல் 


இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பதும் மேற்கொண்டு செய்யப்பட்ட பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெருப்பை உருவாக்குவதற்கு குச்சிகள்,ஈட்டிகள் போன்ற தற்காப்பு கருவிகளை உருவாக்குவதற்கும் தான் மனிதன் மரத்தை பயன்படுத்தி வந்தான் என்பதே இதுவரை நமது புரிதலாக உள்ளது. 

ஆனால் மனிதனுக்கும் ,மரத்துக்குமான தொடர்பு பழங்கால பாரம்பரியம் வரை ஆழமாக வேரூன்றி இருப்பதை அறிந்து நான் ஆசிரியப்பட்டேன்.நாங்கள் அசாதாரணமான ஒன்றை கண்டுபிடித்துள்ளோம் என்று எனக்கு புரிந்தது என்கிறார் ஜாம்பியாவில் உள்ள லிவிங்ஸ்டோன் அருங்காட்சியகத்தை சேர்ந்த குழு உறுப்பினரான பெரிஸ் நாகொம்பவே.

டேட்டிங் தொழில்நுட்பம் 

பிரிட்டனின் கிளாக்டான் பகுதியில் மணலில் புதைந்திருந்த மர ஈட்டி கடந்த 1911 இல் கண்டுபிடிக்கப்பட்டது.உலகின் பழமையான மர  கண்டுபிடிப்பிப்புகளில் ஒன்றாக கருதப்பட்டது.அது 4,00,000 ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

அனால் ஜாம்பியா -தான்சானியா எல்லைக்கு அருகில் உள்ள கலம்போ நீர்விழுச்சிக்கு மேல வளைந்து செல்லும் ஆற்றங்கரையில் தற்போது இரு மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்ணக்கான ஆண்டுகளாக இவை தண்ணீரில் மூழ்கிருப்பதாக கருதிய ஆராச்சியாளர்கள் அவற்றின் காலத்தை லுமினின்சென்ஸ் டேட்டிங் தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டனர்.

அதில் எந்த வகையான பண்டய மனிதர்கள் அல்லது மனித இனங்கள் இவற்றை உருவாக்கியது என்பதை தெளிவாக கணிக்க இயலவில்லை.மேலும் இந்த மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இதுவரை எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் 3,15,000 ஆண்டுகள் பழமையான நாகரிக மனிதன் அல்லது ஹோமோசெபியன்  புதைப்படிவங்களைவிட இந்த பரக்கட்டைகள் மிகவும் பழமையானது என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

மரக்கட்டையின் நீளம் எவ்வளவு?


இரன்டு மரக்கட்டைகளில் சிறியதான ஒன்றின் நீளம் சுமார் 1.5மீ (5அடி) அதை மற்றொன்றுடன் பொருத்தி ஏதோவொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அது ஒரு குடிசை அல்லது நிரந்தர வசிப்பிடமாக இருந்திருக்க  வாய்ப்பில்லை என்று கூறும் ஆய்வு குழுவினர் அது ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆற்றங்கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதற்கு வசதியான ஒரு கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்று பேராசிரியர் டல்லர் கூறினார்.

அனால் அவை எந்த வகையான கட்டமைப்பாக இருந்திருக்கும் என்பதை திட்டவட்டமாக சொல்வது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.

மரவேலை மரபு ?


ஜாம்பியா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஹோமோசெபியன் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாமா என்று எங்களுக்கு தெரியாது.ஏனெனில் அந்த காலத்தைய புதைப்படிவங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.என்கிறார் பேராசிரியர் டல்லர்.

அனால் தென்னாபிரிக்காவின் அந்த நேரத்தில் பல மனித இனங்கள் இருந்தன.எனவே ஹோமோஎரக்டோஸ்  அல்லது ஹோமோ நாலேடி  மனித இனங்களின் காலத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம் என்கிறார் அவர்.

பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பிற்காக இந்த மரக்கட்டைகள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன.கடந்த அரை மில்லியன் ஆண்டுகளாக ,மிகவும் ஆழகாக பாதுகாக்கப்பட்ட நீர் தேக்கத்தை பிரதிபலிக்கும் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ள அவை மீண்டும் ஜாம்பியாவுக்கு கொண்டுவரப்படும் என்கின்றனர் ஆய்வு குழுவினர்.

கொலோம்போ நீர்விழ்ச்சி தளத்தில் பணியைத் தொடர்ந்த அவர் பண்டைய மரவேலைகள் நுட்பங்கள் கைவினைத்திறன் மற்றும் சுற்றுசூழல் உடனான மனித தொடர்புகள் குறித்து நமது அறிவை ஆழப்படுத்துவதற்கான ஆற்றலை கொண்டுள்ளன என்கிறார்.

  

ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு பாலஸ்தீன் இஸ்ரேல் இடையே ஏன் மோதல்? ஆயிரக்கணக்கான உயிர்பலிக்கு காரணம் என்ன


இஸ்ரேல்,பலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனை என்ன?ஹமாஸ் படைக்கும் இப்பிரச்னைக்கு என்ன தொடர்பு?இது  சிகுலுக்குரிய பிரச்சனையாக இருக்க காரணம் என்ன?போன்ற கேள்விக்கு இந்த தொகுப்பு விடை காண்கிறது.


இஸ்ரேல்,பலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரமே மூன்றாம் உலகபோருக்கு  வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு.

பாலஸ்தீன் குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும்,இஸ்ரேல் மீது பாலஸ்தீன் குழுக்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.இப்படிப்பட்ட சூழலில் தெற்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலை நடத்திய ஹமாஸ் படைகள் மீது போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.ஏற்கனவே உக்ரைன் போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் அறிவித்துள்ள போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் நமக்கு பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனை எப்போது எங்கே தொடங்கப்பட்டது என்பதை பார்ப்போம்.

100 ஆண்டுகளாக தீர்க்கப்படாத விவகாரம்.

 மிக சிக்கலான இடத்தில அமைந்திருப்பதே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.எகிப்து ,ஜோர்டான்,சிரியா என சுற்றியும் எதிரி நாடுகள் அமைந்திருப்பதே இஸ்ரேல் விவகாரத்தை தீர்க்க முடியாததற்கு முக்கிய காரணம் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அனால் இவர்களுக்குள் பகை உருவாக்குவதற்கு காரணம் என்ன சற்று வரலாற்றை திரும்பி பார்ப்போம்.

மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன் பகுதி ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.முதல் உலக போரின்போது பாலஸ்தீன் பகுதியை ஆண்டு வந்த ஆட்சியாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையானவர்களாகவும் அரபு மக்கள் பெருபான்மையினராகவும் வாழ்ந்து வந்தனர்.பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு என தனி நாட்டை நிறுவ வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் தொடரந்தத்தை அடுத்து யூதர்களுக்கும்,அரேபியர்களுக்கும் பிரச்சனை வெடித்தது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் 1920களிலிருந்து 1940கள் வரை பாலஸ்தீனத்திற்கு செல்லும் யூதர்களின் எண்ணிக்கை தொடரந்து அதிகரித்தது.இரண்டாம் உலக போரில் யூதர்கள் கோத்துக்கொத்து கொல்லப்பட்டனர்.ஐரோப்பாவிலும் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான அவர்கள் அங்கிருந்து தப்பித்து தாய்நாடு வேண்டி பாலஸ்தீனத்தில் தஞ்சம் அடைந்தனர்.

யூதர்களுக்கும்,அரேபியர்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமைடந்தன.கடந்த 1947ம்  ஆண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் ஒரு திட்டத்தை மு வைத்தன.அதன் படி பாலஸ்தீன் இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.யூதர்களுக்கு தனியாக ஒரு நாடும் அரேபியர்களுக்கு தனியாக ஒரு நாடும் ஜெருசலேமை சர்வதேச நகரமாகவும் அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.

இப்படி 1948ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு  யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலப்பகுதி இஸ்ரேல் என்றும் அரேபியர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலா பகுதி பாலஸ்தீன் என்றும் அழைக்கப்பட்டது.1948ல் இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதை அடுத்து இஸ்ரேல்க்கு  எதிராக பாலஸ்தீனியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க போர்   தொடங்கியது.

போர் தொடங்கி ஒரே ஆண்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இந்த சமயத்தில் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.அண்டை நாடான ஜோர்டான் ஆக்கிரமித்த பகுதி வெஸ்ட் பேங்க் என்றும் எகிப்து ஆக்கிரமித்த பகுதி காசா என்றும் ஆளாக்கப்பட்டு வருகிறது ஜெருசலேம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது ஜோர்டான் நாட்டு படைகளின் கட்டுப்பாட்டின் கிழக்கு ஜெருசலேம் கொண்டு வரப்பட்டது.இதன் பிறகு அங்கு இருக்கும் நாடுகளுக்கிடேயே பல போர்கள் வெடித்து.1967ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகள் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.சிரியா கோலன் குன்றுகள்,காசா மற்றும் எகிப்த்திய சினாய் தீபகற்பத்தின் பெரும்பகுதியையை இஸ்ரேல் ஆக்கிரமிடத்த்து.

பெரும்பாலான பாலஸ்தீனியர்களும் அவர்களது சந்ததியனரும் காசா மற்றும் வெஸ்ட் பேங்க்,சிரியா,மற்றும் லெபனான் போன்ற இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

வெஸ்ட் பேங்க் இன்னும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட்ட பிறகும் அதை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக ஐநா கருதிவருகிறது.ஜெருசலேம் முழுவதையும் இஸ்ரேல் தங்கள் தலைநகராக கூறி வரும் நிலையில் எதிர்காலத்தில்  அமைய உள்ள பாலஸ்தீன் நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் இருக்கும் என பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.கடந்த 50 ஆண்டுகளாக 6 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் வசிக்கும் இந்த பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டியுள்ளது .

அனால் சர்வதேச சட்டத்தின் படி இந்த குடிருப்புக்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவையாகும்.ஐநா பாதுகாப்பு கவுன்சில் பிரிட்டன் ஆகியவற்றின் நிலைப்பாடும் இதுதான்.ஆனால் ஜெருசலேம் முழுவதும் தங்கள் பகுதி என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

தற்போதைய நிலவரம் என்ன ?

கிழக்கு ஜெருசலேம் ,காசா ,வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும்  இடையேதான் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் காசாவை ஆட்சி செய்து வருகிறது.ஹமாசுக்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்கும் இஸ்ரேலும் ,எகிப்தும் காஸாவின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காஸா மற்றும் வெஸ்ட் பேங்க்கில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். பலஸ்தீன வன்முறையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே இப்படி செயல்படுவதாக இஸ்ரேல் விளக்கம் அளிக்கின்றது.

பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன ?

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் பல விவகாரங்களில் மாற்று கருத்து நிலவி வருகிறது.பலஸ்தீனிய மக்களின் எதிர்காலம் என்ன என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.இதுதான் இந்த இஸ்ரேல் பாலஸ்தீனிய போருக்கான காரணம் என்று கூறப்படுகிறது. 

திங்கள், 2 அக்டோபர், 2023

ஸீலாண்டியா: கடலுக்கடியில் 50 லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் எட்டாவது கண்டமா? ஆய்வுகள் கூறுவது என்ன?


பண்டைய உலகின் மேதைகளான அரிஸ்டாட்டில்,எர்டோஸ்த்தின்ஸ்  மற்றும் டோலமி இக்கண்டத்தை பற்றி விவரித்தனர். வரை படங்களை வடிவமைத்தவர்கள் இதற்கterra australis incognita - தெற்கிலிருக்கும் அறியப்படாத நிலம் என்ற லத்தீன்பெயராலும் அழைத்தனர்.

இது நாள் வரை இது ஒரு கற்பனை கண்டம் என்று நம்பப்பட்டது.

பண்டைய கிரேக்க மக்கள்  பூமியின் வடிவியல் காரணங்களுக்காக இது உலகின் மறுபுறத்தில் இருக்க வேண்டும் என்று நம்பினார்.

டச்சு ஆய்வாளர் ஏபெல் தஸ்மான் 1642 இல் ஒரு புதிய நிலத்தை தேடி  இப்போது இருக்கும் நியூஸிலாந்து  என்று அழைக்கப்படும் தீவு கூட்டத்தை கண்டுபிடித்தார்.அனால் அவர் தேடியதை விட இது மிகவும் சிறியதாக தோன்றியது 

அதன்பிறகு ஸிலாண்டிய என்று அழைக்கப்படும் இந்த கண்டம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சுமார் 375 ஆண்டுகள் ஆகியிருகின்றன.இக்கண்டம் 94%தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதால் வெளியில் தெரியாது.அனால் இப்போது இந்த கண்டத்தின் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது 

நியூஸ்லாண்டில் உள்ள GNS science  எனும் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கடலின் கரையில்  இருந்து   தோண்டி எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து ஸிலாண்டியவின் பரப்பளவை கண்டறிந்து ஒரு புதிய விரிவான வரைபடத்தை  உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் இக்கண்டத்தின் முழு பரப்பளவையும் நிறுவுள்ளனர்.அதன் படி அந்த கண்டத்தின் பரப்பளவும் 50 லட்சம் சதுர கிலோமீட்டர்.

ஆனால் கடலின் அலைகளுக்கு அடியில் இருக்கும் ஸிலாண்டியவை ஒரு கண்டமாக எப்படி கருதுவது?

இதற்கான விடை புவியலோடு தொடர்புடையது.

எட்டாவது கண்டமாக கருதப்படும் ஸிலாண்டிய.



ஸிலாண்டிய எப்படி உருவானது?

ஸிலண்டியாவின் தோற்றம் கோண்ட்வானா  வில்  இருந்து துவங்குகிறது.

கோண்ட்வானா  எனும் பெருங்கண்டம்  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது.அதன் பகுதிகள் தான் இன்று நாம் வாழும் கண்டங்களாக உருவாகின.

ஸிலாண்டியாவில் சுமார் 8 கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது.அனால் அதன் அண்டை கண்டங்களான அண்டார்டிகா,மற்றும் ஆஸ்திரேலியா போலல்லாமல் அதன் பெரும்பாலான பகுதிகள் தண்ணீருக்கு அடியில் இருந்தன.கடலுக்கு மேல் காணக்கூடியவையாக இருந்த ஸிலாண்டிய  கண்டத்தின் பகுதிகள் நியூஸிலாந்து  தீவுகள்,நியூ கலிடோனியாவின் பிரென்ச் பிரதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதேசங்களனா லார்ட் ஹோவ் தீவு மற்றும் பால்ஸ் பிரமிட் போன்ற பகுதிகள்.

நீருக்கடியில் இருப்பதால் ஸிலாண்டியா அரிதாகவே ஆய்வு செயப்பட்டது.இதனால் அதன் வடிவம் மற்றும் எல்லைகள் பற்றிய முரண்பட்ட தகவல்களே உலவி வந்தன.இதுவரை இக்கண்டத்தின் தெற்கு பகுதி மட்டுமே வரைபடமாக்கப்பட்டிருக்கிறது.

புவியலாளர் நிக் மோர்டிமர் தலைமையில் புதிய ஆய்வை மேற்கொண்ட குழு இக்கண்டத்தின் மீதமுள்ள மூன்றில் இரண்டு பகுதியை வரைபடமாகியிருக்கிறது.இந்த ஆய்வு இக்கண்டத்தின் மொத்தம் 50 லட்சம் சதுர கீ.மீ  நிலம் மற்றும் கடலோர பகுதிகளின் புவியில் வரைபடத்தை நிறைவு செய்கிறது.என்று இந்த ஆய்வு கூறுகிறது.



ஸிலாண்டியாவின் வயது என்ன?

புவியலாளர்கள் மற்றும் நில அதிர்வு வல்லுநர்கள் கொண்ட குழு தீவுக் கரையில் காணப்டும் மாதிரிகள்,கடலடியில் தரையை துளையிடுவதின் மூலம் பெறப்பட்ட ஆழமான பாறை மாதிரிகள் மற்றும் வண்டல் ஆகியவற்றை ஆய்வு செய்தது.

ஆய்வ ஆய்வாளர்கள் பேசால்ட் மற்றும் கூழாங்கற்கள் மற்றும் மணல் கற்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து அவற்றின் வயதை கணித்தனர்.

இவற்றுள் இருந்த மணல்கற்கள் 9.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிற்கால கிரெட்டேஸியஸ்  சகா பத்திலிருந்து வந்தவை என கண்டுபிடித்தார்.

ஸிலாண்டியவை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நாட்களாகின?

இப்படி கற்களின் பாறைகளின் வயதை நிர்ணயித்தும் காந்த முரண்பாடுகளை புரிந்து கொண்டதன் மூலமும் விஞ்ஞனிகள் வடக்கு ஸிலாண்டியா முழுவதும் முக்கிய புவியல் அலகுகளை வரைபடமாக்கினர்.

1642ஆம் ஆண்டு ஏபெல் டஸ்மான்  ஒரு ஐரோப்பியராக முதன்முதலில் இக்கண்டத்தை பதிவுசெய்தார்.டல்மேனியா தீவு இவர் பெயரால்தான் அழைக்கப்படுகிறது.

உண்மையில் ஸிலாண்டியவை தேடிச்சென்ற பல ஆய்வாளர்கள் ஸிலாண்டிய கடலில் மூழ்கிருந்த காரணத்தால் அந்த தீவுக்கூட்டத்தின் மேல் உள்ள கடல் பரப்பில் அவர்கள் மிதக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்திருக்கவில்லை.

1895ஆம் ஆண்டில் நியூஸ்லண்டின் தெற்கு கடற்கரையில் உள்ள தீவுகள் குறித்து தொடர் ஆயுவுக்காக ஒரு பயணத்தில் கலந்து கொண்ட ஸ்காட்டிஷ் இயற்கை ஆர்வலர் சர் ஜேம்ஸ் ஹெக்டர் ஸிலாண்டியாவின் இருப்புக்கான முதல் உண்மையான தடயங்களை சேகரித்தார்.அதன் புவியலை  படித்த பிறகு நியூஸ்லன்ட் என்பது தெற்கு மற்றும் கிழக்கே நீண்டு பறந்து விரிந்த ஒரு பெரிய கண்ட பகுதியை உருவாக்கிய மலை சங்கிலியின் எச்சம் அது இப்போது நீரில் மூழ்கியுள்ளது என்று முடிவு செய்தார்.

1995 ஆம் ஆண்டு அமெரிக்க புவி இயற்பியலாளர்  ப்ருஸ் லுயண்டிக் மீண்டும் இப்பகுதியை ஒரு கண்டம் என்று விவரித்தார் மற்றும் அதை ஸிலாண்டிய என்று அழைக்க பரிந்துரைத்தார்.

கண்டகளின் மேலோடுகளின் தடிமன் பொதுவாக 40கீ.மீ இருக்கும்.கடல் தரையின் மேலோடு சுமார் 10 கீ.மீ தான் இருக்கும்.



அறிவியலையும் தாண்டிய தாக்கங்கள் 

ஸிலாண்டிய புவியில் அழுத்தத்திற்குள்ளானதால் அதன் வடிவம் நீளமானது.அதன் மேலோட்டின் தடிமன் வெறும் 20 கீ.மீ மட்டுமே உள்ளது.

இறுதியில் செதில் போல மெல்லிய மேலோட்டை கொண்டிருந்த இக்கண்டம் கடலில் மூழ்கி மறைந்தது.

ஸிலாண்டியவின் மேலோட்டின் தடிமன் மற்றும் அதன் பாறைகளின் வகையை வைத்து அதனை ஒரு கண்டம் என்று வாதிடுகின்றனர்.ஆனால் இது அறிவியலையும் தாண்டிய தாக்கங்களைக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் கடல் சட்டம் தொடர்பான மாநாடு நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கல் 370 கீ.மீ வரை நீளும்.நியூஸிலாந்து ஒரு பெரிய கண்டத்தின் சிறு பகுதி என்பது நிரூபிக்கப்பட்டால் அது தனது நிலப்பரப்பை ஆறு மடங்கு அதிகரிக்க முடியும் அதன் மூலம் கடல் ஆய்வுக்கான நிதியையும் அதிகமாக பெறமுடியும்.

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...