புதன், 20 செப்டம்பர், 2023

யோசிச்சிருக்கீங்களா? பாம்பு தன்னைத்தானே கடித்தாலோ? விஷத்தை விழுங்கினாலோ இறக்குமா? உண்மை இதுதான்



பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பாம்புக்கு விஷத்தன்மை இருப்பது தான்.

உலகில் உள்ள ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தில் மிகவும் விஷத்தன்மை கொண்டது இந்த பாம்புகள் தான். இதனால் தான் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் கடித்து மனிதர்கள் பலியாகின்றன.

இப்படி பாம்புகள் கடித்து உடலில் விஷம் பாயும்போது மனிதர்கள், பிற உயிரினங்கள் இறப்பதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் பாம்புகள் தனது விஷத்தை விழுங்கினால் என்னவாகும்? தன் விஷத்தை விழுங்கும்போது பாம்புகள் இறக்குமா? இல்லை தொடர்ந்து உயிர் வாழுமா? என நாம் என்றாவது யோசித்தது உண்டா?

யோசிச்சிருக்கீங்களா? பாம்பு தன்னைத்தானே கடித்தாலோ? விஷத்தை விழுங்கினாலோ இறக்குமா? உண்மை இதுதான்!

சென்னை: பாம்பு தனது வாயில் சுரக்கும் விஷத்தை விழுங்கினாலோ அல்லது பாம்பு தன்னைத்தானே கடித்து கொண்டாலோ இறக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‛பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பாம்புக்கு விஷத்தன்மை இருப்பது தான்.

Can a poisonus snake die after swallow its venom or biting itself?  what is truth? details here

உலகில் உள்ள ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தில் மிகவும் விஷத்தன்மை கொண்டது இந்த பாம்புகள் தான். இதனால் தான் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் கடித்து மனிதர்கள் பலியாகின்றன.

இப்படி பாம்புகள் கடித்து உடலில் விஷம் பாயும்போது மனிதர்கள், பிற உயிரினங்கள் இறப்பதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் பாம்புகள் தனது விஷத்தை விழுங்கினால் என்னவாகும்? தன் விஷத்தை விழுங்கும்போது பாம்புகள் இறக்குமா? இல்லை தொடர்ந்து உயிர் வாழுமா? என நாம் என்றாவது யோசித்தது உண்டா?. அதேபோல் பாம்பு தன்னைத்தானே கடித்து கொண்டால் என்னவாகும்?

இப்படி யாராவது யோசித்து இருந்தாலோ அல்லது இந்த விஷயத்தில் சந்தேகம் இருந்தாலோ? அவர்களுக்கான செய்தி தான் இது. வாங்க பாம்புகளின் விஷம் எப்படி உருவாகிறது. அந்த விஷம் மனிதர்களுக்கு எமனாக எப்படி மாறுகிறது? தன்னைத்தானே கடித்து பாம்புகள் தற்கொலை செய்து கொள்ளுமா? என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக பார்ப்போம்

அதாவது பாம்புகளில் மொத்தம் 2 வகைகள் உள்ளன. ஒன்று விஷத்தன்மை வாய்ந்தவை. இன்னொன்று விஷத்தன்மையற்றவை. இதில் விஷத்தன்மையற்ற பாம்புகளை நாம் விட்டுவிடுவோம். மாறாக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை பார்ப்போம். பொதுவாக பாம்புகளுக்கு விஷம் என்பது அதன் வாயின் மேல்புறத்தில் உள்ள உமிழ்நீர் சுரப்பியில் இருந்து சுரக்கிறது.

இந்த விஷம் பொதுவாக பாம்புகளுக்கு 2 வகைகளில் பயன்படுகிறது. இதில் முதல் விஷயம் என்பது உணவுகளை செரித்து ஜீரணமாக்க பயன்படுகிறது. இதில் 2வது விஷயம் தான் முக்கியம். அது என்னவென்றால் தனக்கு ஆபத்து ஏற்படும்போது எதிரிகளான மனிதர்கள் அல்லது பிற விலங்குகளை கடித்து விஷத்தை கக்கி தப்பிப்பது.

சரி இது இருக்கட்டும். அடுத்ததாக நாம் பாம்பின் விஷத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். பொதுவாக பாம்பின் விஷம் என்பது புரோட்டின் நிறைந்ததாக இருக்கும். அதில் பாலிபெப்டைட்ஸ் (Polypeptides) இருப்பின் அது கொடிய விஷத்தன்மையுடன் கொண்டாகும். இந்த விஷத்தில் இருக்கும் பாலிபெப்டைட்ஸ், ரத்தத்தில் கலந்தால் மட்டுமே மனிதன் உள்ளிட்ட உயிர்களுக்கு பிரச்சனை ஏற்படும். அதாவது பாம்பின் விஷம் நம் ரத்தத்தில் கலந்தவுடன் உடலில் உள்ள திசுக்கள் அதனை உறிஞ்சிக்கொள்ளும். இதுதான் மரணத்தை ஏற்படுத்தும்.

அதேவேளையில் பாம்பு தனது உமிழ்நீரில் சுரக்கும் விஷத்தை விழுங்கினால் அது நேரடியாக அதன் வயிற்றுக்குள் செல்லும். அப்படி செல்லும்போது பாம்புகள் இறந்து விடாது. ஏனென்றால் வயிற்றுக்குள் சென்ற விஷத்தை அங்கிருக்கும் ரசாயனங்கள் ஜீரணித்து விடும். இதனால் பாம்புகள் தொடர்ந்து உயிர் வாழும். அதேவேளையில் பாம்பு தன்னைத்தானே கடித்து விஷத்தை கக்கினால் அது நேரடியாக ரத்தத்தில் சேர்ந்து விடும். இதுபோன்ற சம்பவங்களில் பாம்புகள் இறந்து போய்விடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் பல பாம்புகள் தன்னைத்தானே கடித்து கொண்டு இறந்துள்ளன. பெரும்பாலான பாம்புகள் தங்களின் வால் பகுதியை கடிப்பதன் மூலம் ரத்தத்தில் விஷம் கலந்து இறந்துள்ளதாம். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் என்பது பசி, மனச்சோர்வு, ஆக்ரோஷம் உள்ளிட்ட பிரச்சனைகளை பாம்பு சந்திக்கும்போது தான் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கால்களோடு கடற்கரையில் நடந்து சென்ற மீன்" டிரெண்டாகும் அதிசய மீனின் புகைப்படம்; எங்கே உள்ளது?

 


வழக்கமாக மீன்கள் நீந்துவதற்கு ஏதுவாக துடுப்புகள் போன்ற அமைப்பு மீனின் உடலில் இருப்பதைப் பார்த்திருப்போம். துடுப்புகளுக்குப் பதிலாக கால்களோடு மீன் ஒன்று தென்பட்டுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள ப்ரிம்ரோஸ் சாண்ட்ஸ் கடற்கரையில் கெர்ரி யாரே என்பவர் சென்றிருக்கிறார். அப்போதுதான் அவர் கால்கள் கொண்ட மீனைப் பார்த்திருக்கிறார்.

ஓடும்போது அனைத்து உயிரினத்தையும் கவனிக்கும் பழக்கமுடைய இவர், அன்றும் அப்படித்தான் கடற்கரையில் இருந்த உயிரினங்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் அதிசயமாக மீன் ஒன்று வித்தியாசமாகச் சென்றிருக்கிறது.

சற்று மணற்பரப்பை உற்றுப் பார்த்தபோதே கறுப்பு புள்ளி கோள மீன்( puffer fishஒன்றுக்கு கால்கள் இருந்ததை கவனித்திருக்கிறார். இது ஓர் அற்புதமான தருணம் என அதைப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த மீன்கள் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த மீன் தென்பட்டிருக்கிறது.

இது குறித்து காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் (சிஎஸ்ஐஆர்ஓ) கார்லி டெவின் கூறுகையில், ``இந்த மீன் உள்நாட்டில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. அழிந்து வரும் கடல் மீன்களின் பட்டியலில் இந்த மீனும் பட்டியலிடப்பட்டு இருந்தது. 

கடந்த வார இறுதியில் இம்மீன் கண்டறியும் வரை, ப்ரிம்ரோஸ் சாண்ட்ஸில் உள்ள புள்ளிகள் கொண்ட கோள மீன்களின் எண்ணிக்கை உள்நாட்டில் அழிந்துவிட்டதாகவே  நாங்கள் நினைத்தோம். 

2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த மீன்கள் இருந்தன. அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன்பு தேடிப் பார்த்ததில் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. தற்போது நடப்பதுபோன்ற மீன் தென்பட்டிருப்பது மீண்டும் தேடுவதற்கான காரணத்தை அளித்திருக்கிறது.

சில உயிரினங்கள் கடலின் அடிவாரத்தில் நடக்கத் தங்களது கால்களைப் பயன்படுத்தும். கடற்கரையில் இம்மீன்களை அதிகமாகப் பிடிப்பது மற்றும் மற்ற கடல் உயிரினங்கள் இதன் வாழ்விடங்களை ஆக்கிரமித்ததே இவ்வகை மீன் இனம் அழிந்ததற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.


அதுமட்டுமில்லாமல் இவை அளவில் சிறியதாகவும், தனித்து வாழும் தன்மையுடன் இருப்பதால் இவற்றைக் கண்டறிவதும் கடினம். இந்த இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், செயற்கையான முட்டையிடும் வாழ்விடங்களை அறிமுகப்படுத்த நீர் உயிர்வளர்ப்பகங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.   

இது மீன்களின் அழிவைத் தடுக்கும். இங்கு இனப்பெருக்கம் செய்வதோடு, சிறிய மீன்கள் சற்று வளரும் வரை பாதுகாப்பாக வைக்கவும் உதவும். காடுகளில் மீன்களின் எண்ணிக்கையை விரைவில் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையில், அவற்றை ஆறுகளில் விட உள்ளோம்'' தெரிவித்துள்ளார்.




பென்னு விண்கல் மாதிரியுடன் பூமியை நோக்கி வரும் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்! செப். 24ம் தேதி திக்.. திக்!

 


விண்வெளி ஆராய்சியாளர்கள் தொடர்ந்து விண்வெளியை ஆய்வு செய்து பல ஆராய்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதை தெரிந்துக்கொண்ட நாசா விஞ்ஞானிகள், அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பினர். அவர்கள் எதிர்பார்த்தப்படி அந்த விண்கலமானது விண்கல்லிருந்து சில பகுதிகளை மாதிரி எடுத்துக்கொண்டு பூமிக்கு வர இருக்கிறது.

இச்சோதனைக்காக 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி விண்கல்லை கண்காணிக்கத் தொடங்கியது.  இந்த விண்கல்லிற்கு பென்னு  என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தின் வேலை என்ன?

ஓசிரிஸ் ரெக்ஸின் திட்டமானது சிறு கோள்களை ஆய்வு செய்து அவற்றின் குறைந்தது 60 கிராம்  மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்யப்படுகின்ற ஆராய்ச்சியில் சூரியக்குடும்பத்தின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும், கோள் உருவாக்கம், புவியியல் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை கரிமச்சேர்மங்களின் மூலம் ஆராய்ச்சியில் தெரியவரும் என்கிறார்கள்.


பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்

இதற்காக அனுப்பப்பட்டது தான் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம். 2016ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 2 கோடி கி.மீ தூரம் பயணித்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு விண்கல்லை நெருங்கியது. அதன்பிறகு தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை ஆய்வு செய்து வந்த ஓசிரிஸ்ரெக்ஸ், விண்கல்லின் துகள்களை எடுப்பதற்கான இடத்தை தேர்வு செய்தது.

பின், விண்கல்லின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று ஓசிரிஸ் ரெக்ஸ் தனது இயந்திர கைகளால், விண்கல்லில் உள்ள மாதிரிகளை சேகரித்து தன்னிடமிருந்த கேப்ஸ்யூலில் சேகரித்துக்கொண்டது. பிறகு தனது பணியை 2020ம் ஆண்டு நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ் தான் சேகரித்த மாதிரியுடன் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

பூமியில் தரையிறங்கும் நிகழ்வு நேரலை!

இது வரும் செப்டம்பர் 24ம் தேதி பூமியை வந்தடையும். இந்நிகழ்வை நாசா தனது வெப்சைட் மற்றும் யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலமானது பூமியின் வளி மண்டலத்தை கடந்து பூமியை அடைந்தவுடன் விண்கலத்திலிருந்து கேப்ஸ்யூலானது  பிரிந்து, வளிமண்டலத்தை தாண்டி பாராஷூட் மூலம் உட்டா பாலைவனத்தில் தரையிறங்க இருக்கிறது.



உடனடியாக ஆய்வுப் பணிகள்

இவ்வாறு, அதிவேகமாக பாய்ந்து வரும் கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் படிப்படியாக வேகம் குறைந்து தரையில் விழுந்ததும் அதனை பாதுகாப்பாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். கேப்ஸ்யூல் விழும் இடத்தை துல்லியமாக கண்டறிவதற்காக விமானப்படையினர் ரேடார் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

கேப்ஸ்யூல் விழுந்ததும் மீட்புக் குழு அங்கு சென்று கேப்ஸ்யூலை பத்திரமாக மீட்கும். முதலில் அந்த கேப்ஸ்யூல், ஹெலிகாப்டர் மூலம் முகாமில் உள்ள சுத்திகரிப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தேவையற்ற வாயு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை நீக்கும். பின்னர் மறுநாள், விமானம் மூலம் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படும். அதன்பின், விண்கல் மாதிரியை பிரித்து உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.



இந்த பென்னு போன்ற சிறுகோள்கள் மிகவும் பழமையானவை என்பதால் இவற்றை ஆய்வு செய்வதால், பூமிக்கு தண்ணீர் மற்றும் வாழ்க்கையின் கட்டுமான தொகுதிகள் பற்றி அறிந்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே, வரும் 24ம் தேதி தரையிறங்க இருக்கும் பென்னுவின் மாதிரி நமக்கு பல கேள்விகளுக்கான விடையைத் தெரிவிக்கும்.





ஜிலேபி மீனில் ஆச்சரியம்.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. சர்னு உடல் எடை இறங்குதாமே.. சூப்பர் ஜிலேபி



ஜிலேபி மீன்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? விளக்கெண்ணெய் ஊற்றி இந்த கெண்டை மீனை சமைப்பார்கள் தெரியுமா?
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போதெல்லாம், அசைவப்பிரியர்களுக்கு கை கொடுத்து உதவுவது இந்த ஜிலேபி கெண்டை மீன்தான். காரணம், ஆறு, குளம் ஏரி போன்றவற்றில் இந்த மீன் நிறைய வளரும்.. "கடலின் கோழி" என்று இந்த ஜிலேபியை சொல்வார்கள்..
இதன் செதில்கள் பெரிதாக காணப்படும்.. உடல் இளம்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், இதன் வயிறு மட்டும் வெள்ளைக்கலரில் இருக்கும்.. தமிழக குடும்பங்களில் மிகவும் பரிச்சயமான மீனாக ஜிலேபி உள்ளது.

சத்துக்கள்: கெண்டை மீன் என்று சொல்லப்படும் இந்த ஜிலேபியில், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, நியாசின், பாந்தேனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.. அதனால்தான், கர்ப்பிணிகள் இந்த மீனை தவறாமல் சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால், 340 கிராம் மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டுமாம். அதுவும் டாக்டரின் அனுமதியுடன்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள மீன் என்பதால், சருமத்துக்கு நன்மை தருகிறது.. நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகளை இந்த மீன் குறைக்கிறது.. மலச்சிக்கல் இருப்பவர்கள் உணவில் ஜிலேபி மீனை சேர்த்து கொள்ளலாம். இதனால் மலச்சிக்கல் தீர்வதுடன், வயிறு கோளாறுகள், குடல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.. மூலநோய் உள்ளவர்களும் இதை சாப்பிட்டால், பாதிப்பு குறையுமாம்.

உடல் டையை குறைக்க நினைப்பவர்கள், அல்லது சீரான உடல் எடையை தக்க வைக்க நினைப்பவர்கள், ஜிலேபியை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். காரணம், ஏகப்பட்ட புரோட்டீன் இந்த மீனில் உள்ளது.. நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் உதவியாக இருக்கிறது. புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களும் குறைக்கப்படுகின்றன.

நச்சுத்தன்மை: இந்த மீனில் பாக்டீரியாக்கள் உள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்க ஆய்வுகளில் வந்துள்ளதாம். ஆறு அல்லது ஏரி நீரில் நச்சுத்தன்மையால், இந்த மீன்களிலும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறதாம். அதனால், எந்த இடத்திலிருந்து ஜிலேபி வளர்க்கப்பட்டது என்பதை அறிந்து வாங்குவது மிகவும் அவசியம். அதைவிட நன்றாக வேகவைத்து, முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. அதாவது, 20 முதல் 30 நிமிஷங்களாவது இந்த மீனை வேகவைத்து சாப்பிட வேண்டுமாம்.

ஜிலேபி வறுவல்: தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது, ஜிலேபி மீன்களை கழுவி சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், சேர்த்து, தேங்காய் + வெங்காய விழுதினை இதில் கொட்டி கலக்க வேண்டும். பிறகு, சிறிது புளி கரைசல், கல் உப்பு சேர்த்து மொத்தமாக பிசைந்து, தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் ஜிலேபி வறுவல் ரெடி.
சிலர் இதனை தேங்காய் பால் ஊற்றியும் வறுப்பார்கள்.. சிறிது புளி தண்ணீர், சின்ன வெங்காயம், பூண்டு வைத்து இந்த 3 மூன்றையும் விழுதாக அரைத்துகொள்ள வேண்டும். இதனுடன் சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகளை சேர்த்து, கெட்டியான தேங்காய் பால், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து கலக்கி, 30 நிமிடம் ஊறவைத்து வறுத்தால் ருசியான ஜிலேபி வறுவல் ரெடி.

இந்த ஜிலேபியில் வழக்கம்போல் மீன்குழம்பை செய்யலாம்.. சிலர் விளக்கெண்ணெய் ஊற்றி சமைப்பார்கள்.. ஒரு வாணலியில் விளக்கெண்ணெய், அதனுடன் சமையல் எண்ணெய் இரண்டையுமே ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் பால்: கடுகு, வெந்தயம், வெங்காயம் தக்காளி, ப.மிளகாய், உப்பு, புளி கரைசலை கொட்டி கொதிக்க விட வேண்டும். பிறகு தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதை கொட்ட வேண்டும். குழம்பு நன்றாக கொதித்ததும், 2, 3 மாங்காய் துண்டு, கழுவி வைத்துள்ள மீன்களையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் ஜிலேபி குழம்பு ரெடி.


செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பழுதான செல்போன், லேப்டாப் இரண்டும் குப்பைகள் அல்ல, பொக்கிஷங்கள் - எப்படி தெரியுமா?


 உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உங்கள் வசம் இருக்கிறதா?

அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின் வரவேற்பறையை அலங்கரிப்பவையாகவும் மட்டுமே இருக்கலாம்.

அதாவது இவற்றில் சில மின்னணு சாதனங்கள் பயன்படுத்தும் நிலையிலும், சில பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதாகியும் இருக்கலாம்.

பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் மின்னணு சாதனங்களை வெறும் குப்பையாக (e -waste) நீங்கள் கருதினால், உங்களின் எண்ணத்தை மாற்றி கொள்ளச் சொல்கிறது மின்னணு கழிவுகள் குறித்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

பயன்படுத்தப்படாத மொபைல் மற்றும் லேப்டாப்

இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்தின் (ICEA) தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘அக்சன்சர்’ அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதில், இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 206 மில்லியன் (20.60 கோடி) மின்னணு சாதனங்கள் பழுதாகி பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இதுபோன்ற கழிவுகள் தான் ‘மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி வணிகத்தின்’ அடிப்படை. இந்த வணிகம் வரும் 2035க்குள் 20 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மின்னணு கழிவுகள் மறுவடிமைப்பு, பழுதுபார்த்தல் மற்றும் மறுவிற்பனை உள்ளிட்ட ஆறு விதமான மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி வணிகத்தின் மூலம் 2035க்குள் ஏழு பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த வணிகத்தை முன்னெடுத்தால் அதன் மூலம் 20 பில்லியன் டாலர்கள் வரை இந்த வணிகத்தை பெருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அவற்றை விற்பனை செய்யும் வணிகத்தில் இந்தியா பெரிய சந்தையாக உருவெடுக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இவற்றை மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் வணிகம் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியம்” என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலரான அகிலேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.


50 லட்சம் வேலைவாய்ப்பு

மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல் என்பது இந்தியாவில் பெரிய மற்றும் வேகமாக வளரும் துறையாக விரைவில் உருவெடுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்த துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

மின்னணு, தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. எனவே உலக அளவில், மின்னணு கழிவுகள் மறுசுழற்சி வணிகத்தில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

அத்துடன் இந்த சாதனங்களை பழுதுபார்ப்பதற்கான செலவு வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவு. எனவே, மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் சந்தையில் உலகின் விருப்பமாக இந்தியா மாறக்கூடும்.

“இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் புதிய வர்த்தக வாய்ப்புகளையும் மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி வணிகத்தால் உருவாக்க இயலும்,” என்று ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அஜய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

“மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இதன் பயனாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இச் சாதனங்கள் பழுதுபார்ப்பதற்காக இந்தியாவுக்கு வருகின்றன. அந்நிய செலாவணியை பெருக்க இந்த வணிகம் ஒரு நல்ல வாய்ப்பு” என்றும் அவர் கூறியுள்ளார்


பொருளாதாரம் வலுவடையும்

எபிக் ஃபவுண்டேஷன் மற்றும் வி.எல்.எஸ்.ஐ. சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவரான சத்யா குப்தா, சில ஆண்டுகளுக்கு முன், லிங்க்டினில் ஒரு கணக்கெடுப்பை நடத்தினார்.

அதில் பங்கேற்றவர்களிடம் சராசரியாக நான்கு மொபைல் போன்கள் இருப்பதும். அவை நான்கும் வேலை செய்யும் நிலையில் இருந்தும் அவை பயன்படுத்தபடாமல் இருந்ததும் தெரிய வந்தது.

“நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஒரு கட்டத்துக்கு மேல் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தில் 30 சதவீதம் மதிப்பை கூட்டுகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் சத்ய குப்தா.

அதாவது, “மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல்போனில் சிறு பழுது ஏற்பட்டால் உடனே அதற்கு பதிலாக புதிய மொபைலை வாங்கும் போக்கு மக்களிடம் பொதுவாக உள்ளது.

இவ்வாறு இல்லாமல், அதனை பழுது நீக்கி இன்னும் ஒரு வருடம் கூடுதலாக பயன்படுத்தினால், அதன் மூலம் அந்நிய செலாவணியில் 30 சதவீதம் நம்மால் சேமிக்க முடியும். அத்துடன் இது மின்னணு கழிவுகளை 33 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் செய்யும்.

ஏனெனில், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் இன்றும் இறக்குமதி தான் செய்யப்பட்டு வருகின்றன” என்றும் கூறுகிறார் அவர்.


அந்நிய செலாவணி சேமிப்பு

கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்திற்கு அடுத்தபடியாக மின்னணு பொருட்களை தான் இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த இறக்குமதி வர்த்தகம் 550 பில்லியன் டாலர்கள். இவற்றில் மின்னணு சாதனங்களின் பங்கு 62. 7 பில்லியன் டாலர்களாகும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு, இந்தியாவின் அந்நியச் செலாவணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய சூழலில், மின்னணு சாதனங்களின் இறக்குமதி நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மொபைல்போன் மற்றும் லேப்டாப்கள் பழுதுபார்க்கும் சந்தை இந்தியாவில் அதிகரித்தால், இவற்றின் இறக்குமதி குறைந்து, அதன் பயனாக நாட்டின் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மொபைல்போன் போன்ற சாதனங்கள் 14 உதிரி பாகங்களை கொண்டுள்ளன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் உலோகங்கள் பெரும்பாலும் விலைமதிப்பற்றவையாகவும், அரிதானவையாகவும் உள்ளன.

இவற்றில் 14இல் எட்டு உதிரிப் பாகங்களை இந்தியா முற்றிலும் இறக்குமதி செய்யும் நிலையில் தான் உள்ளது. இத்ததைய சூழலில், மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் சந்தை இந்தியாவில் வளர்ந்தால், மொபைல்போன் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் உலோகங்களை இறக்குமதி செய்வது குறையும்.

யூஸ் அண்ட் த்ரோ Vs பழுதுபார்க்கும் பழக்கம்

மேலை நாடுகளைப் போல, ஒரு பொருளை ஒருமுறை பயன்படுத்திய பின் அதை தூக்கி எறிந்துவிடும் (யூஸ் அண்ட் த்ரோ) கலாசாரம் இந்தியாவில் இல்லை. மாறாக ஒரு பொருளை பலமுறை பல வழிகளில் பயன்படுத்தும் பழக்கம் இந்தியர்களிடம் இயல்பாக உள்ளது.

உதாரணமாக, “பல்துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஸ் (Toothbrush), இந்தியாவில் நான்கு வழிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. முதலில் பல்துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஸ், ஒரு கட்டத்திற்கு மேல் தலைமுடியை டை அடிக்கவும், அதன்பின் குளியலறையை சுத்தம் செய்யவும், குளியலுக்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. பல்துலக்கும் ப்ரஸ்ஸை அதன் ஆயுட்காலத்தில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு உபயோகப்படுத்தும் கலாசாரம் இந்தியாவில் உள்ளது,” என்கிறார் சத்ய குப்தா..

“இன்றைய நவீன உலகில், பலரது வீடுகளில் நான்கு அல்லது ஐந்து லேப்டாப்கள் அல்லது மொபைல்போன்கள் உள்ளன. இந்த சாதனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை நீக்கி மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை நமது மாணவர்களுக்கும், குறைந்த வருவாய் பிரிவினருக்கும் அளிக்க முடியும். இந்த இலக்கை அடைவதற்கு மின்னணு சாதனங்களை பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்தும் கலாசாரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்றும் கூறுகிறார் அவர்.

மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் தொழிலை மேம்படுத்துவது குறித்து அஜய் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பியது பிபிசி.

அதற்கு அவர், “நாம் மேற்கத்திய நுகர்வு முறையிலிருந்து விலகி, இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும். இதில் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்துகிறார் அவர்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “தற்போது தயாரிக்கப்படும் மொபைல்போன்களை பழுது பார்க்க முடியாது. பெரும்பாலான மொபைல்கள் பேட்டரியைகூட மாற்ற முடியாத நிலையில் தான் உள்ளன. பல ஸ்மார்ட்போன்களை திறக்கக்கூட இயலாது.

இந்த நிலைமையை மாற்றும் விதமாக, பழுதுபார்த்து மேம்படுத்தக்கூடிய தயாரிப்புகளாக மொபைல்போன்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அப்போது அவற்றை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உண்டாகும்” எனவும் அவர் கூறினார்.

இந்தியா என்ன செய்து  கொண்டிருக்கிறது?

மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு, எபிக் பவுண்டேஷன் இந்தியாவில் ‘பழுதுபார்க்கும் உரிமை’ பற்றிய அறிக்கையைத் தயாரித்துள்ளது.

“ வன்பொருட்கள் துறையில் (ஹார்டுவேர்) ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் என்பதால், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (MAIT) அறிக்கையை அரசு தயாரித்து வருகிறது.

நுகர்வோர் விவகார அமைச்சகம் இதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இதற்கான பணிகள் பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன,” என்று கூறுகிறார் அஜய் சவுத்ரி.

“அரசாங்கத்தின் இறக்குமதி - ஏற்றுமதித் துறை மற்றும் சுங்கத் துறையினரும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் மின்னணு சாதனங்களை சரிசெய்து அவற்றை ஏற்றுமதி செய்யும் விதத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் விளக்கி உள்ளார்.

இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது.

லாபகரமான இந்த முயற்சியின் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதுடன், இந்தியாவுக்கு புதிய ஏற்றுமதி சந்தையும் உண்டாகும் எனவும் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முறைசார்ந்த தொழிலாக மாற்ற வேண்டும்'

மொபைல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் பழுதுபார்க்கும் பணி, இந்தியாவில் பெரும்பாலும் முறைசாரா தொழிலாகதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை ஒழுங்கமைத்து, முறைசார்ந்த தொழிலாக மாற்றினால், அதன் மூலம் பெரும் பலன் கிடைக்கும்” என்கிறார் சத்ய குப்தா

இந்தியாவில் தற்போது இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள்தான், மின்னணு சாதனங்களை பழுதுபார்க்கும் துறையில் முறைசார்ந்து இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமே மின்னணு முறையில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம் இருந்து பணியை பெற்று அவற்றை மேற்கொண்டு வருகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மின்னணு பழுதுபார்க்கும் நிறுவனங்கள் இருப்பதால், இந்தியாவில் இந்த துறையில் நிறுவனங்களை தொடங்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

முறைசாராமல் இயங்கிவரும் மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் துறையை முறைசார்ந்த துறையாக மாற்றினால், இந்ச சாதனங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பழுதுபார்க்க அனுமதி

மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதி அளிக்கும் வசதியை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களை அவற்றின் உத்தரவாத காலத்தில் பழுதுபார்ப்பதற்கான அனுமதியை பெறலாம்.

வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் மற்றும் விவசாய கருவிகளை அவற்றின் உத்தரவாத காலத்தில் பழுதுபார்க்கும் அனுமதியை அளிக்கும் நோக்கில் இந்த இணையதளம் தற்போது இயங்கி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள், நுகர்பொருள் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்த 17 நிறுவனங்கள், மின்னணு சாதனங்களை பழுதுபார்க்கும் அனுமதிக்கான மத்திய அரசின் இந்த இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளன.

ஆப்பிள், சாம்சங், ரியல்மி, ஓப்போ, ஹெச்பி, போட், பானாசோனிக், எல்ஜி, கென்ட், ஹேவெல்ஸ். மைக்ரோடெக், லுமினஸ் ஆகிய பிராண்ட்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

ஹீரோமோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஆகிய வாகன பிராண்டுகளும் இதில் அடங்கும்.





சனி, 16 செப்டம்பர், 2023

ஒருவரின் மூளையை மாற்றி புதிய மூளையை பொருத்த முடியுமா?

 https://img.freepik.com/premium-photo/concept-art-human-brain-exploding-with-knowledge-creativity-generative-ai_618582-945.jpg?size=626&ext=jpg

1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம்… அமெரிக்காவின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜே. ஒயிட், கிளீவ்லேண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார்.

குரங்கு ஒன்றின் தலையை எடுத்து மற்றொன்றின் உடலில் பொருத்துவதுதான் அது. சிக்கலான அந்த அறுவை சிகிச்சை, கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த குரங்கு கண் விழித்தவுடன் அதனால் பார்க்கவும், நுகரவும், ஏன் கடிக்கவும் கூட முடிந்தது. குரங்கிற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த அரிய அறுவை சிகிச்சை அப்போது ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது.

இதுதான் முதல் முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மூளை மாற்று அறுவை சிகிச்சை அல்லது தலை மாற்று அறுவை சிகிச்சை என்று சொல்லலாம்.

இதை ஒயிட், ‘ உடல் மாற்று அறுவை சிகிச்சை’ என்று அழைக்க விரும்பினார். மூளை அல்லது உடல் மாற்று அறுவை சிகிச்சையை ஒயிட் மட்டும் முயற்சிக்கவில்லை. அவரை போல நிறைய மருத்துவ நிபுணர்களும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், உயிர்களைக் காக்க இன்றைக்கு பயன்படும் பல அறுவை சிகிச்சை முறைகளை உருவாக்கிய பெருமை டாக்டர் ஒயிட்டை சேரும்.

ஆனால் அவரது இதுபோன்ற முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கப்படவும் செய்தன. அதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் தன் வாழ்நாள் முழுவதும் புதிய மருத்துவ முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். நூற்றுக்கணக்கான பரிசோதனைகளை செய்தார். இருப்பினும் அவர் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்த குரங்கு சில நாட்களிலேயே இறந்துவிட்டதால் ஒயிட்டின் இந்த சாதனை குறுகிய காலம் வரை மட்டும் பேசப்பட்டது.https://www.baltana.com/files/wallpapers-14/Human-Brain-HD-Wallpapers-36894.jpg

 

மனித மூளை உருவாக்கும் மில்லியன் கணக்கான இணைப்புகள், மனித உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளன

மூளையை தண்டுவடத்துடன் இணைப்பதில் உள்ள சிக்கல்கள்

மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் முன்னேற்றங்களை கண்டு வந்தாலும், மூளையை மட்டும் மருத்துவர்களால் இன்னமும் மாற்றி அமைக்க முடியவில்லை.

ஒரு நபர் மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக வைத்து கொண்டால், அவருக்கு புதிதாக பொருத்தப்படும் மூளையை அவரின் முதுகு தண்டு வடத்துடன் இணைப்பது இயலாத காரியம் என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.

இதனால் தான், “இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான உறுப்பாக மூளை கருதப்படுகிறது”.

உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளை, தன்னுடன் பல மில்லியன் கணக்கான இணைப்புகளையும் கொண்டுள்ளது.. உடலுறுப்புகள் உடனான மூளையின் தொடர்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மறுசீரமைப்பது என்பது இன்னும் நவீன மருத்துவ உலகின் வரம்பிற்குள் வராத விஷயமாகவே உள்ளது.

ஒரு வாதத்திற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்களால் செய்ய முடிவதாக வைத்து கொண்டால், அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களின் நினைவுகள் மற்றும் உணர்வுகள் என்னவாகும்? என்பன போன்ற விடை காணப்படாத கேள்விகளும் உள்ளன.

மருத்துவர் ஒயிட், மூளை மாற்று (அல்லது தலைமாற்று) அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திய குரங்குகளின் உடலிலும், சிகிச்சைக்கு பின் கழுத்துக்கு கீழே உறுப்புகளின் இயக்கம் முடங்கித் தான் போயின (Paralysed).

 

மூளை செல்கள் சிதைவு நிலையை குறிக்கும் பார்கின்சன் நோய்

உபரி நியூரான்கள்

தற்போதைய சூழலில், வெற்றிகரமான மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமில்லை எனும்பொழுது, தன்னைத் தானே மறுவடிமைத்து கொள்ளும் மூளையின் வியக்கத்தக்க திறனை கவனத்தில் கொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

நரம்பு செல்கள் என்றழைக்கப்படும் நியூரான்களுக்கு இடையேயான தொடர்பை மாற்றியமைப்பது, அவற்றை புதிதாக உருவாக்குவது மற்றும் நீக்குவது போன்ற செயல்பாடுகளின் மூலம் மூளை தன்னை மறுசீரமைத்து கொள்கிறது.

ஒரு கணித சமன்பாட்டிற்கு நாம் தீர்வு காண்பது, ஒயின் மது வகையின் பெயர் நம் நினைவில் நிற்பது, இனி நமக்கு தேவைப்படாதது என நாம் முடிவெடுக்கும் விஷயங்கள் நம் நினைவில் இருந்து அகன்றுபோவது என எல்லாமும் நியூரான்களின் செயல் தான்.

இவற்றை கொண்டு தன்னைத் தானே மறுசீரமைத்து கொள்ளும் மூளையின் வியக்கத்தக்க திறன் ‘பிளாஸ்டிசிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில், மூளையில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து அது மீளவும் இந்த பிளாஸ்டிசிட்டி தான் காரணமாக உள்ளது.

அதேநேரம் பிளாஸ்டிசிட்டிக்கு இன்னொரு புறமும் (மறுபக்கமும்) உள்ளது. பார்கின்சன் அல்லது அல்சைமர் நோய் ஒருவருக்கு இருப்பதை இதனால் மறைக்க முடியும். இதனால் பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்களாக ஒருவருக்கு இந்த நோய்கள் இருப்பது கவனிக்கப்படாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நியூரோஜெனிசிஸ் என்ற புதிய கண்டுபிடிப்பு

நியூரான்கள் அவற்றின் இணைப்புகளை மாற்றிக் கொள்கின்றன. ஆனால், செயலிழக்கும் அல்லது இறக்கும் நியூரான் செல்கள் மீண்டும் உருவாகின்றனவா என்ற கேள்விக்கு, இழக்கப்படும் நரம்பு செல்களுக்கு பதிலாக மற்றொன்றை ஈடாக்க முடியாது என்பதே பெரும்பாலோரின் பதிலாக இருக்கிறது.

இருப்பினும், மனிதனின் மூளையில் உள்ள ஸ்டெம் செல்களின் மூலம் தினந்தோறும் புதிய நியூரான்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ‘நியூரோஜெனிசிஸ்’ எனப்படும் இந்த செயல் நடைபெறுவதைக் கண்டுபிடித்தது நரம்பியல் மருத்துவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

துரதிருஷ்டவசமாக, நன்கு வளர்ந்த மனிதனின் மூளையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இந்த நியூரோஜெனிசிஸ் எனும் திறன் தொடர்கிறது. இந்தப் பகுதிகளில் ஒன்று தான் மனிதனின் கற்றல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய ஹிப்போகாம்பஸ்.

உடற்பயிற்சி மற்றும் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ள உணவுகள் புதிய நியூரான்களின் உற்பத்தியை தூண்டலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் உடல் பருமன், முதுமை அல்லது நரம்பியல் கடத்தல் நோய்கள், புதிய நியூரான்கள் உருவாதலை குறைக்கலாம்.

எனவே, புதிய நியூரான்களின் உருவாக்கத்தை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம், மூளையை மீண்டும் உருவாக்குவது என்பது, இன்று மருத்துவ அறிவியலுக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

 (Shutterstock)

மனித மூளையில் உள்ள ஸ்டெம் செல்களின் மூலம் தினந்தோறும் புதிய நியூரான்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ‘நியூரோஜெனிசிஸ்’ எனப்படும் இந்த செயல் நடைபெறுது குறித்த கண்டுபிடிப்பு நரம்பியல் மருத்துவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று அறுவை சிகிச்சை

இறக்கும் நியூரான்களை பிற செல்களை கொண்டு மாற்றி அமைக்கும் நுட்பமான சிகிச்சை முறையை நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பல தசாப்தங்களாக செய்து வருகின்றனர்.

இந்த சிகிச்சை முறை, பல்வேறு நரம்பியல் நோய்களுக்கு சாத்தியமான தீர்வாக இருக்கலாம் என்று சோதனை அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

நரம்பியல் தொடர்பான நோயான பார்க்கின்சன் நோய், ‘டோபமைன்’ எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நியூரான்களின் செயலிழப்பை கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. நியூரான்களின் செயலிழப்பு மூளையின் செயல்பாட்டில் குழப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கிறது.

இந்த சேதத்தை சரி செய்ய, டோபமைன் எனும் நரம்பியல் கடத்தியான வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நியூரான்களின் மாற்று அறுவை சிகிக்ச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வகத்தில் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகள் மற்றும் நோயாளிகளுக்கு, சிகிச்சைக்கு பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஆய்வக நிலையான இந்த சிகிச்சையை, மருத்துவமனைகளின் நிலைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

ஏனெனில் இதுநாள்வரை, கருவின் திசுக்களில் இருந்து குறிப்பிட்ட ஒரு வரம்புக்குள் நியூரான்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு நோயாளியின் இறந்த ஆயிரக்கணக்கான நியூரான்களுக்கு மாற்றாக தேவைப்படும் புதிய நியூரான்களை பெறுவதற்கான ஆதாரம் தேவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இதற்கு, ‘ஸ்டெம் செல்’ மருத்துவ தொழில்நுட்பம் தான் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த வழி என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

இந்த முறையில் பெறப்படும் நியூரான்களை கொண்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தவுடன் சிக்கலான இந்த சோதனை முடிந்துவிடுவதில்லை. ஒருவருக்கு செலுத்தப்படும் புதிய நியூரான்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதையும், அவை அருகில் உள்ள நியூரான்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தாக வேண்டும்.

இவை அனைத்துக்கு பிறகும், மூளையின் மீளுருவாக்க திறன் நரம்பியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருக்கலாம். ஆனால் அறிவியலை நம்புங்கள் என்று கூறும் நிபுணர்கள், மூளையை போன்று அறிவியலும் நிபுணத்துவம் வாய்ந்தது என்கின்றனர்.

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

1000 ஆண்டு பழமையானது.. ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ! சாத்தியமானது எப்படி? வியப்பு

 


மெக்ஸிகோ: ‛ஏலியன்கள்' குறித்த கட்டுக்கதைகள் தற்போது உலா வரும் நிலையில் மெக்சிகோவில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த 2 ஏலியன்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

பூமிக்கு அடிக்கடி வேற்று கிரக வாசிகள், பறக்கும் தட்டுகள் வந்து செல்வதாக நாம் சிறுவயதில் இருந்தே கதைகள் மூலமாக கேட்டு வருகிறோம். வேற்று கிரக வாசிகளை ஏலியன்ஸ் என்றும் கூறுகின்றனர். அதேபோல் அடையாளம் தெரியாமல் விண்வெளியில் இருந்து பறந்து வரும் பொருட்களை யுஎப்ஓ என்கிறார்கள்.



இன்று வரை யுஎப்ஓ, ஏலியன்ஸ்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழி செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். அதேநேரத்தில் பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா? என்பதை அறிவதற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளும் விண்வெளி துறையில் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தான் தற்போது மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடந்து வரும் சூழலில் அதுதொடர்பான கண்காண்சியை நடத்தி மெக்சிகோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மவுசன் தலைமை தாங்கினார். அமெரிக்க கடற்படையின் முன்னாள் விமானி ரியான் கிரேவ்ஸும் உடனிருந்தார். இவர் தனது பணியின் போது வேற்று கிரக விண்கலத்தை பார்த்ததாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். தற்போது அமெரிக்கா இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தான் மெக்சிகோ கண்காட்சியை நடத்தி முடித்துள்ளது.


இந்த கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மனிதர்களை போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஜெய்ம் மவுசன் கூறுகையில், ‛‛நான் பல ஆண்டுகளாக வேற்று கிரக வாசிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தற்போது மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு செய்தேன். இந்த ஏலியன்ஸ்களின் உடல்கள் பறக்கும் தட்டுகளில் இருந்து மீட்கப்படவில்லை. மாறாக பெருவில் உள்ள குஸ்கோவில் உள்ள ஒருவகையான பாசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டது.



அதன்பிறகு ரேடியோ கார்பன் டேட்டிங் யுத்திகளின் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனையின்போது இந்த ஜீவராசிகள் பூமியில் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கவில்லை'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதனை சிலர் ஆச்சரியமாக பார்க்கும் நிலையில் பலரும் சந்தேகங்களை கிளப்பி உள்ளனர். ஆனாலும் மெக்சிகோவில் நடந்த ஏலியன்ஸ் கண்காட்சி என்பது மக்களிடம் வேற்றுகிரகவாசிகள் மற்றும் யுஎப்ஒக்கள் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.

வியாழன், 14 செப்டம்பர், 2023

புதிதாக பிறந்த சூரிய குழந்தை.. 1000 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து படம்பிடித்த ஜேம்ஸ் வெப்

 


ஆழ் விண்வெளி குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதியதாக பிறந்த சூரியன் ஒன்றை அடையாளம் கண்டிருக்கிறது. இது நமது சூரியனை போலவே இருப்பதால் இதற்கு 'பேபி சன்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

உண்மையில் மனிதனுக்கு என்ன தேவை? என்கிற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பசித்த மனிதனிடம் கேட்டால் உணவு என்பான், குளிர் இருக்கும் மனிதனிடம் கேட்டால் வீடு என்பான் சரி இப்படி எல்லா அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிய பின்னரும் மனிதனுக்கான தேவையென ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு 'ஆம் மனிதனுக்கு இன்னமும் தேவை இருக்கிறது' என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்விதான் எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இந்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டதுதான் ஜேஸ்ம் வெப் தொலைநோக்கி.

இந்த பிரபஞ்சம் 'பெரு வெடிப்பு' (Big Bang) எனும் நிகழ்வுகளுக்கு பின்னர்தான் பிறந்திருக்கிறது என்றும், அதன் பின்னர் மெல்ல உருவானதுதான் சூரிய குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதர்கள் எல்லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே பெரு வெடிப்பு நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பது குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நேற்று சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது இந்த பிரபஞ்சத்திற்கு புதியதாக வந்திருக்கும் சூரியனை ஜேம்ஸ் வெப் அழகாக படம்பிடித்திருக்கிறது.



இது முழுமையான சூரியன் அல்ல. இது உருவாகி ஒரு சில ஆயிரம் ஆண்டுகள்தான் இருக்கம். நமது சூரியனுக்கு வயது 450 கோடி ஆண்டுகள். ஆனால் நம்முடைய சூரியன் இளையது. அப்படியெனில் வெறும் சில ஆயிரம் அண்டுகள் ஆன புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூரியன் மிக மிக இளையது. பிறந்து சில நாட்கள் ஆன குழந்தை போன்றது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். எனவே இதற்கு Baby sun என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.

ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு விநாடிக்கு தோராயமாக 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இதே வேகத்தில் ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவை கடக்கிறதோ அதைதான் ஒளி ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நமது சூரியன் இப்போது இருக்கும் அளவை விட 92 மடங்கு குறைந்து வெறும் 8 மடங்கு மட்டுமே இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த புதிய சூரியனும் இருக்கிறது. இது இன்னும் சில கோடி ஆண்டுகள் கழித்து நமது சூரியனை போன்று வளரும்.



தற்போது இதில் கார்பன் மோனாக்சைடு, சிலிக்கான் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் செழுமையாக இருக்கின்றன. சூரியன் உருவாதற்கு ஹைட்ரஜன் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பேபி சூரியனை ஆராய்வதன் மூலம் நம்முடைய சூரியன் எப்படி உருவானது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சூரியன் பைனரி நட்சத்திரம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதாவது பிரபஞ்சத்தில் அனைத்து நட்சத்திரங்களும் இரண்டாகதான் இருக்கும். இதுதான் பைனரி ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...